ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும்..  வெள்ள நிவாரணத் தொகைக்கு.. விண்ணப்பிக்கலாம்.. எப்படி?

Dec 16, 2023,05:06 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டை இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு நிவாரணத் தொகை நேரடியாக வழங்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டு வங்கிகள் மூலம் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


மிச்சாங் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் மிகவும் கடுமையான பாதிப்பை சந்தித்தது. இதனால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையை போக்க தமிழக அரசு ரூபாய் 6 ஆயிரம்  நிவாரணத் தொகை அளிக்க உத்தரவிட்டது. இதில் யார் 6000 நிவாரணத் தொகை பெற தகுதி உடையவர்கள் என்பதை அறிவித்திருந்தனர்.


இந்நிலையில் குடும்ப அட்டை இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், ஆகியோருக்கு நேரடியாக ரொக்கப் பணம் வழங்கப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக இவர்களுக்கு ஒரு விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் தனித்தனியாக விண்ணப்பித்து தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவரங்கள் தெரிவித்து வங்கியின் மூலமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதில்  11 கேள்விகள் கொண்ட விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.




ஆதார் எண்

வீட்டு முகவரி

குடும்பத் தலைவியின் அல்லது தலைவர் பெயர்

வங்கிக் கணக்கு விவரம் (வங்கி பெயர், கிளை, கணக்கு எண்)

பாதிக்கப்பட்ட வீட்டின் வகை (குடிசை வீடு, அடுக்குமாடி குடியிருப்பு)

பாதிப்பின் விபரம் (பகுதியாக பாதிக்கப்பட்டதா, முழுவதுமாக பாதிக்கப்பட்டதா)

வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து துணிகள் மற்றும் பாத்திரங்கள் பாதிக்கப்பட்டதா

வீட்டில் உள்ளே தண்ணீர் சென்று வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதா.. போன்ற விவரங்கள் அதில் கேட்கப்பட்டுள்ளன.


உறுதிமொழியாக மிச்சாங் புயலால் எனது வீட்டில் வெள்ளம் புகுந்து துணிமணிகள் மற்றும் உடைமைகள் சேதம் அடைந்து  எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது என விண்ணப்பத்தை பூர்த்தி செய்பவர்கள் கையெழுத்திட வேண்டும். 


அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் நபர் வருமான வரி கட்டுபவர்கள், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், குடும்ப அட்டை இல்லாதவர்கள், ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள நியாயவலைக்கடையில் சென்று விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்ய வேண்டும். இதன் பின்னர் பாதிப்பின் தீவிரத்தை அறிந்து  அரசு நிவாரணத் தொகை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை பெறுவதற்கான டோக்கன் நேற்று முதல் வீடு தேடி சென்று கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 17 அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்