சென்னை: தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறையாக அரசு அறிவிக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் சென்னை போன்ற பெரிய நகரங்களில் வேலை காரணமாக வசித்து வருகின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற விழா நாட்களில் தொடர் விடுமுறையின் போது மக்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவர். ஊருக்குப் போகும் போது சில நாட்கள் குடும்பத்தினருடன் செலவழிப்பதை பலரும் விரும்புகிறார்கள்.
குறிப்பாக சென்னையில் வசிக்கும் அரசு ஊழியர்கள் இதுபோன்ற விடுமுறை தினங்களில்தான் ஏதாவது பிளான் செய்ய முடியும். இந்த வருடம் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகை வேலை நாட்களில் வராமல் விடுமுறை நாளில் அதாவது நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

நவம்பர் 11ம் தேதி சனிக்கிழமை அரசு விடுமுறைதான். ஞாயிற்றுக்கிழமை தீபாவளி.. இந்த நிலையில் அடுத்த நாள் அதாவது நவம்பர் 13ம் தேதி விடுமுறை கிடைத்தால் சொந்த ஊர்களுக்குச் செல்வோர் சற்று நிதானமாக ஊர் திரும்பி வரலாமே என்று கருதுகிறார்கள்.
சொந்த ஊருக்கு சென்ற மக்கள் தீபாவளி இரவு அன்று தீபாவளி கொண்டாட்டத்தை விட்டு விட்டு கிளம்ப நேரிடும். அப்போதுதான் மறுநாள் பணிக்குச் செல்ல முடியும். இந்த ஹரிபரியான சூழ்நிலையை தவிர்க்க வெளியூர் செல்லும் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் நலன் கருதி தீபாவளி மறுநாள் விடுமுறை விட வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இதையடுத்து அந்தக்கோரிக்கையை ஏற்று அரசு தற்போது 13ம் தேதியை விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாட்டத்தின் போது கடைசி நேரத்தில் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த முறை அப்படி இல்லாமல் முன்கூட்டியே அறிவித்தால் நலமாக இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதன்படி தற்போது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் நவம்பர் 18ம் தேதி பணி நாளாக அரசு அறிவித்துள்ளது.
விடுமுறையை அறிவித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை குளிர்வித்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. பிறகென்னப்பா ஜாலியா கொண்டாடுங்க.. அதேபோல 18ம் தேதி மறக்காம வேலைக்கு வந்துருங்க!
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}