சென்னை: தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறையாக அரசு அறிவிக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் சென்னை போன்ற பெரிய நகரங்களில் வேலை காரணமாக வசித்து வருகின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற விழா நாட்களில் தொடர் விடுமுறையின் போது மக்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவர். ஊருக்குப் போகும் போது சில நாட்கள் குடும்பத்தினருடன் செலவழிப்பதை பலரும் விரும்புகிறார்கள்.
குறிப்பாக சென்னையில் வசிக்கும் அரசு ஊழியர்கள் இதுபோன்ற விடுமுறை தினங்களில்தான் ஏதாவது பிளான் செய்ய முடியும். இந்த வருடம் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகை வேலை நாட்களில் வராமல் விடுமுறை நாளில் அதாவது நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
நவம்பர் 11ம் தேதி சனிக்கிழமை அரசு விடுமுறைதான். ஞாயிற்றுக்கிழமை தீபாவளி.. இந்த நிலையில் அடுத்த நாள் அதாவது நவம்பர் 13ம் தேதி விடுமுறை கிடைத்தால் சொந்த ஊர்களுக்குச் செல்வோர் சற்று நிதானமாக ஊர் திரும்பி வரலாமே என்று கருதுகிறார்கள்.
சொந்த ஊருக்கு சென்ற மக்கள் தீபாவளி இரவு அன்று தீபாவளி கொண்டாட்டத்தை விட்டு விட்டு கிளம்ப நேரிடும். அப்போதுதான் மறுநாள் பணிக்குச் செல்ல முடியும். இந்த ஹரிபரியான சூழ்நிலையை தவிர்க்க வெளியூர் செல்லும் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் நலன் கருதி தீபாவளி மறுநாள் விடுமுறை விட வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இதையடுத்து அந்தக்கோரிக்கையை ஏற்று அரசு தற்போது 13ம் தேதியை விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.
கடந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாட்டத்தின் போது கடைசி நேரத்தில் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த முறை அப்படி இல்லாமல் முன்கூட்டியே அறிவித்தால் நலமாக இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதன்படி தற்போது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் நவம்பர் 18ம் தேதி பணி நாளாக அரசு அறிவித்துள்ளது.
விடுமுறையை அறிவித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை குளிர்வித்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. பிறகென்னப்பா ஜாலியா கொண்டாடுங்க.. அதேபோல 18ம் தேதி மறக்காம வேலைக்கு வந்துருங்க!
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}