ஆனந்தம் அடைகிறது மனம்.... அனுபவத்தில்!

Dec 22, 2025,12:04 PM IST

- கலைவாணி ராமு


தாத்தா பாட்டி கவிதை

தாத்தா பாட்டி என்ற உறவே 

புனிதமான உறவின் வெளிப்பாடு....

தாய் அன்பிற்கு நிகரான அன்பை 

காட்டுபவள் தான் பாட்டி....

தந்தை புகட்டும் அறிவை 

அசாதாராணமாக கதைகளில் எளிதில் புரியவைப்பார் தாத்தா.... 

மகன் ,மகளுக்காக வாழ்ந்த நாட்களை விட

வசந்தமான வண்ணமயமான காலம் இந்த பொற்காலம்....

பேரக் குழந்தைகள் கேட்பதை வாங்கிக் கொடுத்து 

அவர்களின் இன் முகத்தை ரசிப்பதில் 

அலாதி பிரியமுள்ளவர்கள் தாத்தா,பாட்டிகள்.....




வீட்டின் சமையலறையில் 

சலிப்புடன் வேலை செய்கையில் 

பேரன் பேத்திகளுக்காக புதிய தின்பண்டங்கள் செய்ய 

சமையலறையில்  சந்தோஷத்தை உணர்ந்தவள் பாட்டி....

அவர்களை அள்ளி அரவனைத்து 

ஆனந்த முத்தமிடுவது 

அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை 

நிறைவு செய்யும் ஆனந்தமாக..

அவர்களுடன் கை கோர்த்து நடக்கும் போது 

வானமும் வசமாகும் ....

அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகையில் 

ஆனந்தம்  அடைகிறது மனம்.... அனுபவத்தில்!


(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்