ஆனந்தம் அடைகிறது மனம்.... அனுபவத்தில்!

Dec 22, 2025,12:04 PM IST

- கலைவாணி ராமு


தாத்தா பாட்டி கவிதை

தாத்தா பாட்டி என்ற உறவே 

புனிதமான உறவின் வெளிப்பாடு....

தாய் அன்பிற்கு நிகரான அன்பை 

காட்டுபவள் தான் பாட்டி....

தந்தை புகட்டும் அறிவை 

அசாதாராணமாக கதைகளில் எளிதில் புரியவைப்பார் தாத்தா.... 

மகன் ,மகளுக்காக வாழ்ந்த நாட்களை விட

வசந்தமான வண்ணமயமான காலம் இந்த பொற்காலம்....

பேரக் குழந்தைகள் கேட்பதை வாங்கிக் கொடுத்து 

அவர்களின் இன் முகத்தை ரசிப்பதில் 

அலாதி பிரியமுள்ளவர்கள் தாத்தா,பாட்டிகள்.....




வீட்டின் சமையலறையில் 

சலிப்புடன் வேலை செய்கையில் 

பேரன் பேத்திகளுக்காக புதிய தின்பண்டங்கள் செய்ய 

சமையலறையில்  சந்தோஷத்தை உணர்ந்தவள் பாட்டி....

அவர்களை அள்ளி அரவனைத்து 

ஆனந்த முத்தமிடுவது 

அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை 

நிறைவு செய்யும் ஆனந்தமாக..

அவர்களுடன் கை கோர்த்து நடக்கும் போது 

வானமும் வசமாகும் ....

அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகையில் 

ஆனந்தம்  அடைகிறது மனம்.... அனுபவத்தில்!


(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏன் எதற்கு எதனால்?

news

டேக் கேர் ..ரதி ....மிஸ் யு ரதி.. அவளின் (ல்) அவன்! (15)

news

தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

IPL 2026: மும்பை இந்தியன்ஸ் வெற்றியால்.. சென்னை சூப்பர் கிங்ஸ் ஹேப்பிண்ணே!

news

வைகாசி மாத சிறப்புகள்.. முருகப் பெருமான் அவதரித்த நன்னாள் வரும் மாதம்!

news

NEET.. நீட் தேர்வு முறையில் பெரும் மாற்றம் வருகிறது.. அடுத்த ஆண்டு முதல் கம்ப்யூட்டரில் தேர்வு!

news

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: காலையிலேய ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் விஜய்

news

அறிவுக் கூர்மையும் புத்திசாலித்தனமும் (Intellect and Intelligence)

news

விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

அதிகம் பார்க்கும் செய்திகள்