புல்லும் காளானும்!

Mar 28, 2026,04:57 PM IST

- ஷீலா ராஜன்


வெண்மையான காளான்

மழை வந்த தருணத்தில் பிறக்கும்,

மண்ணின் மேல் மென்மையாக விரியும்;

ஒரு சின்ன நேரத்தின் சிரிப்பு,

சூடான நினைவாய் மறையும்…


புல்லின் வேர் 

மண்ணுக்குள் அமைதியாகப் பிறக்கும்,

ஆழத்தில் நிழலாய் பிடியும்;

காலம் கடந்து நிற்கும் உறுதி,

காற்றிலும் குலையாத நம்பிக்கை…




காளான் அன்பு –

கண் முன்னே தோன்றும்,

ஆனால் சீக்கிரம் மாறும்;

ஒரு கணத்தின் இனிமை,

ஒரு நினைவின் மாயை…* 


புல்லின் வேர் அன்பு –

கண் பார்க்காத இடத்தில் வளர்ந்து,

உள்ளத்தை முழுதாக பிடிக்கும்;

ஒரு வாழ்நாளின் துணை,

ஒரு உறவின் நிலைமை…


ஆனால் —

மனிதர் இடத்தில்

காளான் அன்பு வரக்கூடாது;

மழை போல் வந்து போகும் நேசம்

மனதை காயப்படுத்தும்…


மனிதர் உறவில்

புல்லின் வேர்போன்ற அன்பே வேண்டும்;

ஆழமாகப் பதிந்து,

எப்போதும் தாங்கி நிற்கும்

நிலையான பாசம் வேண்டும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கொளத்தூர் மு.க.ஸ்டாலின்.. காட்பாடி துரைமுருகன் .. திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

news

பெரம்பூரில் திமுக போட்டி.. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளும் அறிவிப்பு

news

PTR Palanivel Thiagarajan Vs Sundar C: மதுரையின் அடையாளத்துடன் மோதும் ஈரோட்டு சிங்கம்!

news

எல்பிஜியை விடுங்க.. சான்ஸ் இருந்தால் பிஎன்ஜிக்கு மாறிடுங்க.. பெஸ்ட்!

news

ஐபிஎல் 2026: சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. 2 வாரங்களுக்கு எம்.எஸ். தோனி விளையாட மாட்டார்!

news

Iran War: 850 ஏவுகணைகள் காலி.. அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு காலியாகிறதா?

news

Respect Your Cat Day: பூனைதானே.. அப்படின்னு நினைக்காதீங்க.. அவங்களையும் மதிக்கணும்!

news

அசைஞ்சு வரும் தேரு.. அது எங்கு ஆழித் தேர்.. தேரோட்டத்திற்குத் தயாராகும் திருவாரூர்!

news

தலைவலி ஏன் வருகிறது.. வந்தா என்ன பண்ணலாம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்