- ஷீலா ராஜன்
வெண்மையான காளான்
மழை வந்த தருணத்தில் பிறக்கும்,
மண்ணின் மேல் மென்மையாக விரியும்;
ஒரு சின்ன நேரத்தின் சிரிப்பு,
சூடான நினைவாய் மறையும்…
புல்லின் வேர்
மண்ணுக்குள் அமைதியாகப் பிறக்கும்,
ஆழத்தில் நிழலாய் பிடியும்;
காலம் கடந்து நிற்கும் உறுதி,
காற்றிலும் குலையாத நம்பிக்கை…

காளான் அன்பு –
கண் முன்னே தோன்றும்,
ஆனால் சீக்கிரம் மாறும்;
ஒரு கணத்தின் இனிமை,
ஒரு நினைவின் மாயை…*
புல்லின் வேர் அன்பு –
கண் பார்க்காத இடத்தில் வளர்ந்து,
உள்ளத்தை முழுதாக பிடிக்கும்;
ஒரு வாழ்நாளின் துணை,
ஒரு உறவின் நிலைமை…
ஆனால் —
மனிதர் இடத்தில்
காளான் அன்பு வரக்கூடாது;
மழை போல் வந்து போகும் நேசம்
மனதை காயப்படுத்தும்…
புல்லின் வேர்போன்ற அன்பே வேண்டும்;
ஆழமாகப் பதிந்து,
எப்போதும் தாங்கி நிற்கும்
நிலையான பாசம் வேண்டும்!
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}