புல்லும் காளானும்!

Mar 28, 2026,04:57 PM IST

- ஷீலா ராஜன்


வெண்மையான காளான்

மழை வந்த தருணத்தில் பிறக்கும்,

மண்ணின் மேல் மென்மையாக விரியும்;

ஒரு சின்ன நேரத்தின் சிரிப்பு,

சூடான நினைவாய் மறையும்…


புல்லின் வேர் 

மண்ணுக்குள் அமைதியாகப் பிறக்கும்,

ஆழத்தில் நிழலாய் பிடியும்;

காலம் கடந்து நிற்கும் உறுதி,

காற்றிலும் குலையாத நம்பிக்கை…




காளான் அன்பு –

கண் முன்னே தோன்றும்,

ஆனால் சீக்கிரம் மாறும்;

ஒரு கணத்தின் இனிமை,

ஒரு நினைவின் மாயை…* 


புல்லின் வேர் அன்பு –

கண் பார்க்காத இடத்தில் வளர்ந்து,

உள்ளத்தை முழுதாக பிடிக்கும்;

ஒரு வாழ்நாளின் துணை,

ஒரு உறவின் நிலைமை…


ஆனால் —

மனிதர் இடத்தில்

காளான் அன்பு வரக்கூடாது;

மழை போல் வந்து போகும் நேசம்

மனதை காயப்படுத்தும்…


மனிதர் உறவில்

புல்லின் வேர்போன்ற அன்பே வேண்டும்;

ஆழமாகப் பதிந்து,

எப்போதும் தாங்கி நிற்கும்

நிலையான பாசம் வேண்டும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொருத்தமோ பொருத்தம் MATCHING MATCHING .. ஒரு நிமிடக் கதை (10)

news

புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு.. செங்கோட்டையன் இலாகா மாற்றம்

news

விஜய் படைத்த புதிய சாதனை: தமிழ்நாட்டின் முதல் கூட்டணி அரசு.. நீண்ட கால கனவு நனவானது!

news

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 19 மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லை

news

அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு தமிழக அமைச்சரவையில் இடமில்லை!

news

முதல்வர் விஜய் சர்க்கார்.. இளைஞர்கள் நிரம்பிய அமைச்சரவை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு இடம்?

news

விஜய் அமைச்சரவை: 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு.. 3 பெண்களுக்கு இடம்!

news

Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?

news

ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?

அதிகம் பார்க்கும் செய்திகள்