- ஷீலா ராஜன்
வெண்மையான காளான்
மழை வந்த தருணத்தில் பிறக்கும்,
மண்ணின் மேல் மென்மையாக விரியும்;
ஒரு சின்ன நேரத்தின் சிரிப்பு,
சூடான நினைவாய் மறையும்…
புல்லின் வேர்
மண்ணுக்குள் அமைதியாகப் பிறக்கும்,
ஆழத்தில் நிழலாய் பிடியும்;
காலம் கடந்து நிற்கும் உறுதி,
காற்றிலும் குலையாத நம்பிக்கை…

காளான் அன்பு –
கண் முன்னே தோன்றும்,
ஆனால் சீக்கிரம் மாறும்;
ஒரு கணத்தின் இனிமை,
ஒரு நினைவின் மாயை…*
புல்லின் வேர் அன்பு –
கண் பார்க்காத இடத்தில் வளர்ந்து,
உள்ளத்தை முழுதாக பிடிக்கும்;
ஒரு வாழ்நாளின் துணை,
ஒரு உறவின் நிலைமை…
ஆனால் —
மனிதர் இடத்தில்
காளான் அன்பு வரக்கூடாது;
மழை போல் வந்து போகும் நேசம்
மனதை காயப்படுத்தும்…
புல்லின் வேர்போன்ற அன்பே வேண்டும்;
ஆழமாகப் பதிந்து,
எப்போதும் தாங்கி நிற்கும்
நிலையான பாசம் வேண்டும்!
தினம் தினம் கொண்டாட்டமா?
கொசுவின் அங்கலாய்ப்பு!
மறைந்தாலும் நன்று...!
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்!
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!
{{comments.comment}}