- ஷீலா ராஜன்
வெண்மையான காளான்
மழை வந்த தருணத்தில் பிறக்கும்,
மண்ணின் மேல் மென்மையாக விரியும்;
ஒரு சின்ன நேரத்தின் சிரிப்பு,
சூடான நினைவாய் மறையும்…
புல்லின் வேர்
மண்ணுக்குள் அமைதியாகப் பிறக்கும்,
ஆழத்தில் நிழலாய் பிடியும்;
காலம் கடந்து நிற்கும் உறுதி,
காற்றிலும் குலையாத நம்பிக்கை…

காளான் அன்பு –
கண் முன்னே தோன்றும்,
ஆனால் சீக்கிரம் மாறும்;
ஒரு கணத்தின் இனிமை,
ஒரு நினைவின் மாயை…*
புல்லின் வேர் அன்பு –
கண் பார்க்காத இடத்தில் வளர்ந்து,
உள்ளத்தை முழுதாக பிடிக்கும்;
ஒரு வாழ்நாளின் துணை,
ஒரு உறவின் நிலைமை…
ஆனால் —
மனிதர் இடத்தில்
காளான் அன்பு வரக்கூடாது;
மழை போல் வந்து போகும் நேசம்
மனதை காயப்படுத்தும்…
புல்லின் வேர்போன்ற அன்பே வேண்டும்;
ஆழமாகப் பதிந்து,
எப்போதும் தாங்கி நிற்கும்
நிலையான பாசம் வேண்டும்!
கொளத்தூர் மு.க.ஸ்டாலின்.. காட்பாடி துரைமுருகன் .. திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
பெரம்பூரில் திமுக போட்டி.. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளும் அறிவிப்பு
PTR Palanivel Thiagarajan Vs Sundar C: மதுரையின் அடையாளத்துடன் மோதும் ஈரோட்டு சிங்கம்!
எல்பிஜியை விடுங்க.. சான்ஸ் இருந்தால் பிஎன்ஜிக்கு மாறிடுங்க.. பெஸ்ட்!
ஐபிஎல் 2026: சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. 2 வாரங்களுக்கு எம்.எஸ். தோனி விளையாட மாட்டார்!
Iran War: 850 ஏவுகணைகள் காலி.. அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு காலியாகிறதா?
Respect Your Cat Day: பூனைதானே.. அப்படின்னு நினைக்காதீங்க.. அவங்களையும் மதிக்கணும்!
அசைஞ்சு வரும் தேரு.. அது எங்கு ஆழித் தேர்.. தேரோட்டத்திற்குத் தயாராகும் திருவாரூர்!
தலைவலி ஏன் வருகிறது.. வந்தா என்ன பண்ணலாம்?
{{comments.comment}}