- ஷீலா ராஜன்
வெண்மையான காளான்
மழை வந்த தருணத்தில் பிறக்கும்,
மண்ணின் மேல் மென்மையாக விரியும்;
ஒரு சின்ன நேரத்தின் சிரிப்பு,
சூடான நினைவாய் மறையும்…
புல்லின் வேர்
மண்ணுக்குள் அமைதியாகப் பிறக்கும்,
ஆழத்தில் நிழலாய் பிடியும்;
காலம் கடந்து நிற்கும் உறுதி,
காற்றிலும் குலையாத நம்பிக்கை…

காளான் அன்பு –
கண் முன்னே தோன்றும்,
ஆனால் சீக்கிரம் மாறும்;
ஒரு கணத்தின் இனிமை,
ஒரு நினைவின் மாயை…*
புல்லின் வேர் அன்பு –
கண் பார்க்காத இடத்தில் வளர்ந்து,
உள்ளத்தை முழுதாக பிடிக்கும்;
ஒரு வாழ்நாளின் துணை,
ஒரு உறவின் நிலைமை…
ஆனால் —
மனிதர் இடத்தில்
காளான் அன்பு வரக்கூடாது;
மழை போல் வந்து போகும் நேசம்
மனதை காயப்படுத்தும்…
புல்லின் வேர்போன்ற அன்பே வேண்டும்;
ஆழமாகப் பதிந்து,
எப்போதும் தாங்கி நிற்கும்
நிலையான பாசம் வேண்டும்!
பொருத்தமோ பொருத்தம் MATCHING MATCHING .. ஒரு நிமிடக் கதை (10)
புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு.. செங்கோட்டையன் இலாகா மாற்றம்
விஜய் படைத்த புதிய சாதனை: தமிழ்நாட்டின் முதல் கூட்டணி அரசு.. நீண்ட கால கனவு நனவானது!
தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 19 மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லை
அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு தமிழக அமைச்சரவையில் இடமில்லை!
முதல்வர் விஜய் சர்க்கார்.. இளைஞர்கள் நிரம்பிய அமைச்சரவை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு இடம்?
விஜய் அமைச்சரவை: 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு.. 3 பெண்களுக்கு இடம்!
Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?
ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?
{{comments.comment}}