- கவிக்குயில் ஜெயசுதா
வெளியில் வெளுத்தெடுக்கிறது வெயில்.. இப்பவே வியர்த்துக் கொட்ட ஆரம்பித்து விட்டது. இந்த நேரத்தில் ஜில்லென்று மழை பெய்தால் எப்படி இருக்கும்..!
ஆனால் நாம நினைத்த நேரத்தில் எல்லாம் மழை வந்து விடுமா என்ன.. ஆனால் மழை வரும்.. அதாவது நினைவுகளில் தேங்கி நிற்கும் மழையை நாம் கூட்டி வருவோமா.. மழை நினைவுகளை உங்களுக்காக கவிதை வரிகளில் வடித்துள்ளார் நம்முடைய ஜெயசுதா.
2015ம் ஆண்டு சென்னையை மூழ்கடித்த பெரு மழையை மறக்க முடியுமா என்ன.. அப்போது எழுதிய ஒரு கவிதை இது.. உங்களுக்காக!

ஓ மழையே!
நெடுநாளாய் வாராமல்
ஏமாற்றம் தந்தாய்!
திடீரென வந்தாய்
உயிர் பல வாரினாய்
ஜடப்பொருளோடு சவமாக்கினாய்
உனக்கு ஏன் இந்த ஆர்ப்பரிப்பு!
எங்களுக்கோ பரிதவிப்பு!
நிலையில்லா அலைக்கழிப்பு
பெய்தது கனமழை
சூழ்ந்தது பிணமழை
பள்ளமான இடம் நோக்கி
வெள்ளம் செல்ல
உள்ளம் உருக்குது
நிலை குலைய வைத்து
உருக்குலைய வைக்கும்
உருக்கமான காட்சிகள்
--
அச்சச்சோ! அச்சச்சோ!
வீட்டைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்து போச்சே
எங்க குடி கெட்டுப் போச்சே!
ஏரிகளின் ஆக்கிரமிப்பு
கண்கள் ஏதெல்லாம் பார்த்து போச்சு!
முகமெல்லாம் வாடிப்போச்சே
குடலெல்லாம் எரிச்சுப்போச்சு!
பல்லி பாம்பு பூரான்
எங்களை பதம் பார்த்து போச்சே!
ஊறியிருந்த இளமையெல்லாம்!
ஊனமாக உயர்ந்து போச்சே!
ஆறுமாதம் பிளான் போட்ட சாலை
தண்ணீரில் அடிச்சுப்போச்சே!
ஏரியெல்லாம் நிரம்பி போச்சே!
எங்க உயிரெல்லாம் எடுத்துப்போச்சே!
குளமெல்லாம் நிரம்பி போச்சே! எங்க
கண்ணீரோ வற்றிப் போச்சே!
உலகமெல்லாம் இருண்டு போச்சே!
உயிரெல்லாம் ஒடுங்கிப் போச்சே!
பருவ நிலை மாற்றத்தால் - எங்கள்
வாழ்க்கை இயல்புநிலை மாறிப்போச்சே!
வாழ்க்கைத் தரம் புரண்டு போச்சே!
வீதியெல்லாம் நாறிப்போச்சே!
(ஆசையாய் வளர்த்த)
ஆடு மாடு கோழியெல்லாம்
ஆத்தோட அடிச்சிப்போச்சே!
அரிசி, புளி, உப்பு எல்லாம்
குப்பையோடு குப்பையாச்சே!
வெள்ளம் பாய்ந்து
உள்ளம் நெகிழ வைத்த காட்சிகள்
ரசித்த வண்ணத் தொலைக்காட்சி
ருசித்த உணவுப் பொருட்கள்
நேசித்த ஆடைகள்
மகிழ வைத்த மகிழ்வுந்து
நெகிழ வைத்து
நெஞ்சம் சிதைந்து
மூழ்கிப் போனதே
மூச்சு விடும் நேரத்தில்.
அதிசயம் கண்டு வியந்த
இந்நூற்றாண்டில் -
தொலை தொடர்பு சாதனங்களும்
காட்சிப்படுத்தும் கணினியும் இருந்தும்
கொண்டு சென்றதென்னவோ!
மின்சாரமில்லா முன் காலத்திற்கு
சென்ற இடமெல்லாம் தண்ணீர்
குடிக்க கிடைக்கவில்லை சொட்டு நீர்.
கல்வியாளர்களின் துடிதுடிப்பு
தேர்வுகள் ஒத்திவைப்பு
கண்ணீர் அஞ்சலி!
(ஜெயசுதா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாரிவாக்கம், பூவிருந்தவல்லி, திருவள்ளூர் மாவட்டம்)
PTR Palanivel Thiagarajan Vs Sundar C: மதுரையின் அடையாளத்துடன் மோதும் ஈரோட்டு சிங்கம்!
ஐபிஎல் 2026: சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. 2 வாரங்களுக்கு எம்.எஸ். தோனி விளையாட மாட்டார்!
ஓ மழையே.. மறக்க முடியாத பெரு மழையே!
Iran War: 850 ஏவுகணைகள் காலி.. அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு காலியாகிறதா?
அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
உங்க சிந்தனையை மாத்தி ஒரு தடவை ஆட்சியை என்கிட்ட கொடுத்துதான் பாருங்களேன்: சீமான் ஆவேசம்!
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் அறிவிப்பு
Thank you People of India... ஏவுகணையில் எழுதி.. இஸ்ரேலைத் தாக்கி.. ஈரான் அதிரடி!
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
{{comments.comment}}