- ப.பூரணவள்ளி
கதிரவன் ஒளியால் நீராவி என்றாகி
கார்முகிலாய் வானில் வளம் வருமே
குளிர்ந்த காற்று முகிலைத் தொட
மழையாய்ப் பெய்தால் மண் செழிக்கும்.
மண்ணில் வளங்கள் பல செழித்தால்
மக்கள் நலமுடன் தான் வாழ்வர்
உண்மையும் நேர்மையும் செழித்து ஓங்கும்
ஒப்பிலா நற்பண்புகள் தான் சிறக்கும்.

விண்நீர் பொய்க்கும் நிலை வந்தால்
மண்வளம் பொய்க்கும் நிலை வருமே
மண்வளம் பொய்ப்பின் பின் நாளில்
நம் சந்ததி வாழ வழிவருமோ?
நீர்நிலை அனைத்தின் நலம் காப்போம்
வளம் பெற நிலத்தடி நீர் காப்போம்
அளவாய் பயன் செய நாம் அறிவோம்
நம் சந்ததி செழிக்க வழி கொடுப்போம்.
(ப.பூரணவள்ளி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்,
மதுரை)
Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!
CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?
கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!
CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!
Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!
Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!
MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்
CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்
வாடும் மனம் வாசம் பெறும் அம்மா சொல்லும் ஒரு சொல்லில்...!
{{comments.comment}}