- ப.பூரணவள்ளி
கதிரவன் ஒளியால் நீராவி என்றாகி
கார்முகிலாய் வானில் வளம் வருமே
குளிர்ந்த காற்று முகிலைத் தொட
மழையாய்ப் பெய்தால் மண் செழிக்கும்.
மண்ணில் வளங்கள் பல செழித்தால்
மக்கள் நலமுடன் தான் வாழ்வர்
உண்மையும் நேர்மையும் செழித்து ஓங்கும்
ஒப்பிலா நற்பண்புகள் தான் சிறக்கும்.

விண்நீர் பொய்க்கும் நிலை வந்தால்
மண்வளம் பொய்க்கும் நிலை வருமே
மண்வளம் பொய்ப்பின் பின் நாளில்
நம் சந்ததி வாழ வழிவருமோ?
நீர்நிலை அனைத்தின் நலம் காப்போம்
வளம் பெற நிலத்தடி நீர் காப்போம்
அளவாய் பயன் செய நாம் அறிவோம்
நம் சந்ததி செழிக்க வழி கொடுப்போம்.
(ப.பூரணவள்ளி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்,
மதுரை)
உலகமே ஒரு நாடக மேடை.. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா மக்களே!
அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி... சிதமுக.,விற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
நினைவுகளை (நினைக்கும்) நனைக்கும் ஒரு நாள்!
ஏப்ரல் 2-ல் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் விஜய்யின் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு: தவெக தொண்டர்கள் அதிர்ச்சி
நீரும் வாழ்வும்
செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!
முயற்சியும் தோல்வியும்!
கால் வைத்த இடமெல்லாம் வெற்றித் தடம்.. சாதிக்கத் துடிக்கும் மாணவர் மோ.வசீகரன்!
{{comments.comment}}