- ப.பூரணவள்ளி
கதிரவன் ஒளியால் நீராவி என்றாகி
கார்முகிலாய் வானில் வளம் வருமே
குளிர்ந்த காற்று முகிலைத் தொட
மழையாய்ப் பெய்தால் மண் செழிக்கும்.
மண்ணில் வளங்கள் பல செழித்தால்
மக்கள் நலமுடன் தான் வாழ்வர்
உண்மையும் நேர்மையும் செழித்து ஓங்கும்
ஒப்பிலா நற்பண்புகள் தான் சிறக்கும்.

விண்நீர் பொய்க்கும் நிலை வந்தால்
மண்வளம் பொய்க்கும் நிலை வருமே
மண்வளம் பொய்ப்பின் பின் நாளில்
நம் சந்ததி வாழ வழிவருமோ?
நீர்நிலை அனைத்தின் நலம் காப்போம்
வளம் பெற நிலத்தடி நீர் காப்போம்
அளவாய் பயன் செய நாம் அறிவோம்
நம் சந்ததி செழிக்க வழி கொடுப்போம்.
(ப.பூரணவள்ளி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்,
மதுரை)
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}