தி ஹேக்: முந்தைய சாதனையை முறியடித்து புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா. இந்தியாவின் நம்பர் 1 வீரராக சாதனையும் படைத்துள்ளார். அவருக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செஸ் போட்டி என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருபவர் தான் விஸ்வநாதன் ஆனந்த். தமிகத்தை சேர்ந்த அவர் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர். அது மட்டுமின்றி பல வருடங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்து வந்தவரும் அவரே. அவருக்கு அடுத்தபடியாக செஸ்சில் பலரும் முண்டியடித்துக் கொண்டு வந்தாலும் விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை முறியடிக்க முடியவில்லை.
கடந்தாண்டு 17 வயதான செஸ் வீரர் குகேஷ் முதலிடத்திற்கு வந்தாலும் அவரால் அந்த இடத்தில் நீடித்து நிற்க முடியவில்லை. இந்நிலையில் இந்தியாவின் நம்பர் 1 வீரராக பிரக்ஞானந்தா புதிய உச்சம் தொட்டுள்ளார். நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீம் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில், உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி சாதனை படைத்ததன் மூலம் இந்த புதிய உச்சத்தைத் தொட்டார் பிரக்ஞானந்தா.

இப்போட்டியில் வென்றதன் மூலம் இந்திய செஸ் வீரர் விஸ்வநாத ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிரக்ஞானந்தா பிடித்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருந்த நிலையில் இளம் வீரர் பிரக்ஞானந்தா 2748.3 புள்ளிகள் எடுத்து விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
புதிய உச்சம் தொட்டுள்ள பிரக்ஞானந்தாவுக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல்வேறு வீரர்களும், தலைவர்களும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் செஸ் விளையாட்டு வீராங்கனை தான். சமீபத்தில் தான் அர்ஜூனா விருதை வைஷாலி பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}