தி ஹேக்: முந்தைய சாதனையை முறியடித்து புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா. இந்தியாவின் நம்பர் 1 வீரராக சாதனையும் படைத்துள்ளார். அவருக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செஸ் போட்டி என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருபவர் தான் விஸ்வநாதன் ஆனந்த். தமிகத்தை சேர்ந்த அவர் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர். அது மட்டுமின்றி பல வருடங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்து வந்தவரும் அவரே. அவருக்கு அடுத்தபடியாக செஸ்சில் பலரும் முண்டியடித்துக் கொண்டு வந்தாலும் விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை முறியடிக்க முடியவில்லை.
கடந்தாண்டு 17 வயதான செஸ் வீரர் குகேஷ் முதலிடத்திற்கு வந்தாலும் அவரால் அந்த இடத்தில் நீடித்து நிற்க முடியவில்லை. இந்நிலையில் இந்தியாவின் நம்பர் 1 வீரராக பிரக்ஞானந்தா புதிய உச்சம் தொட்டுள்ளார். நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீம் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில், உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி சாதனை படைத்ததன் மூலம் இந்த புதிய உச்சத்தைத் தொட்டார் பிரக்ஞானந்தா.
இப்போட்டியில் வென்றதன் மூலம் இந்திய செஸ் வீரர் விஸ்வநாத ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிரக்ஞானந்தா பிடித்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருந்த நிலையில் இளம் வீரர் பிரக்ஞானந்தா 2748.3 புள்ளிகள் எடுத்து விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
புதிய உச்சம் தொட்டுள்ள பிரக்ஞானந்தாவுக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல்வேறு வீரர்களும், தலைவர்களும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் செஸ் விளையாட்டு வீராங்கனை தான். சமீபத்தில் தான் அர்ஜூனா விருதை வைஷாலி பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}