தெரு நாய்களுக்காக.. டெல்லி முதல்வரை கத்தியால் குத்தவும் திட்டமிட்டிருந்த ராஜேஷ் சக்ரியா!

Aug 25, 2025,05:48 PM IST

டெல்லி: டெல்லியிலிருந்து தெருநாய்களை அகற்றக் கூடாது என்று தான் விடுத்த வேண்டுகோள்கள் குறித்து எந்த பதிலும் அளிக்காததால்தான் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை தாக்க முயன்றுள்ளார் குஜராத்தைச் சேர்ந்த ராஜேஷ் சக்ரியா என்று தெரிய வந்துள்ளது. அத்தோடு அவர் முதல்வரை கத்தியால் குத்தவும் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த 41 வயதான சக்ரியா, டெல்லி முதல்வர் ரேகா குப்தாவைத் தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


சமீபத்தில், டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தெரு நாய்களைப் பிடித்து, குடியிருப்புப் பகுதிகளுக்கு வெளியே உள்ள காப்பகங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக நாய் ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்தினர். சக்ரியாவும் நாய்கள் மீது பிரியம் கொண்டவர். அவருக்கும் இந்த உத்தரவு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து இதற்கு எதிராக வினையாற்ற முயன்றுள்ளார் அவர். 




உச்சநீதிமன்றத்தில் தனது போராட்டத்தை நடத்து முடிவு செய்து அங்கு போயுள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் இருந்த கடும் பாதுகாப்பைக் கண்ட சக்ரியா, அங்கிருந்து ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள முதல்வரின் இல்லத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, முதல்வர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். உண்மையில் அவர் முதல்வரை கத்தியால் குத்தித் தாக்க திட்டமிட்டுத்தான், சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.


ஆனால் முதல்வர் இல்லத்தில், மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில் இருந்த பாதுகாப்பைக் கண்டு கத்தியை தூக்கி எறிந்துவிட்டார். பின்பு, மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியின் போது முதல்வரிடம் மனு கொடுப்பது போல நெருங்கிச் சென்று ரேகா குப்தாவை அறைந்து, தள்ளிவிட்டு, அவரது தலைமுடியை பிடித்து இழுத்துள்ளார்.


ரேகா குப்தாவை தாக்கிய வழக்கில், ராஜேஷ் சக்ரியாவின் நண்பரான தாசீன் சையத் என்பவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சையத், சக்ரியா இருவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரித்த போலீஸார், சையத்தை நேற்று கைது செய்தனர். தாக்குதலுக்கு முன், சையத், சக்ரியாவிற்கு பணம் அனுப்பியுள்ளார், மேலும் இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். சக்ரியா, முதல்வர் ரேகா குப்தாவின் ஷாலிமார் பாக் இல்லத்தின் காணொளியை சையத்திற்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்