சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், மனைவி சைந்தவி இருவரும் பரஸ்பரமாக பிரிவதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பணியாற்றி வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் தனது பள்ளி தோழியான பின்னணி பாடகி சைந்தவி என்பவரை சிறுவயதில் இருந்து காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.
இந்த தம்பதிகள் இருவரும் சமீபத்தில் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் தெரிவித்தனர். இது சோசியல் மீடியாவில் கடும் வைரலானது. இவர்களின் 12 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் தற்போது மன கசப்பு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் பரஸ்பரமாக பிரியப் போவதாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி. பிரகாஷ், சைந்தவி, இருவரும் பரஸ்பரமாக பிரிவதாக தெரிவித்தனர். ஆனால் இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் ஒரே காரில் வந்து விவாகரத்து மனு கொடுத்துவிட்டு, பிறகு மீண்டும் இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றுள்ளது அனைவரையும் சற்று யோசிக்க வைத்துள்ளது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?
வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}