மும்பை: நடிகை ஹன்சிகா மோத்வானி தனது தாய் வீட்டுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தனது கணவர் சோஹேல் கத்தூரியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைப் பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்துவது போல அவரது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணவருடன் இருப்பது போன்ற புகைப்படங்களையும் அவர் நீக்கியுள்ளார்.
கணவர் சோஹேலுடன் எடுத்த திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் நீக்கிவிட்டார் ஹன்சிகா. கிட்டத்தட்ட மூன்று வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு இந்தப் பிரிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு டிசம்பரில் இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது நினைவிருக்கலாம்.
திருமணம் முடிந்ததும் ஹன்சிகா, சோஹேலுடன் வாழ்ந்து வந்தார். ஆனால் இப்போது தனது தாயுடன் வசிப்பதற்காக அவர் தனது கணவரைப் பிரிந்து சென்றுவிட்டார். ஹன்சிகா மற்றும் சோஹேலின் காதல் கதை 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' என்ற தலைப்பில் ஒரு ரியாலிட்டி ஷோவாக வெளியானது. இந்த நிகழ்ச்சியில், பாரிஸில் ஈஃபிள் கோபுரத்தின் கீழ் சோஹேல் தன் காதலை வெளிப்படுத்தியது முதல் அவர்களது திருமணம் வரை பல விஷயங்கள் காட்டப்பட்டன.

சோஹேலுக்கு ஏற்கெனவே ரிங்கி பஜாஜ் என்ற பெண்ணுடன் திருமணமாகி இருந்தது. அந்த ரிங்கி பஜாஜ், ஹன்சிகாவின் நெருங்கிய தோழி என கூறப்பட்டது. ரிங்கியை பிரிந்த பிறகுதான் ஹன்சிகாவை மணந்தார் சோஹேல். ஆனால், தற்போது இந்த திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டிருப்பதா பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டு முதல் சமூக வலைத்தளங்களில் சோஹேல் எந்தப் பதிவும் வெளியிடவில்லை. தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை ‘பிரைவேட்’ ஆக மாற்றியிருக்கிறார்.
திருமண முறிவு செய்திகள் குறித்து ஹன்சிகா மற்றும் சோஹேல் இருவரும் இதுவரை எந்தவித அதிகாரபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் ஹன்சிகா செய்த மாற்றங்களும், சோஹேலின் அமைதியும் இவர்களது பிரிவு குறித்த விவாதங்களை வலுப்படுத்தியுள்ளது.
நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி தருவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
கருகிய மலர்.. வாடாத வாசம்.. அவள்.. Burnt flower!
கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
தைப்பூசத் திருவிழா.. சென்னிமலையில் கோலாகலம்.. நாளை கொடியேற்றம்
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பதிவு!
{{comments.comment}}