மும்பை: நடிகை ஹன்சிகா மோத்வானி தனது தாய் வீட்டுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தனது கணவர் சோஹேல் கத்தூரியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைப் பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்துவது போல அவரது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணவருடன் இருப்பது போன்ற புகைப்படங்களையும் அவர் நீக்கியுள்ளார்.
கணவர் சோஹேலுடன் எடுத்த திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் நீக்கிவிட்டார் ஹன்சிகா. கிட்டத்தட்ட மூன்று வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு இந்தப் பிரிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு டிசம்பரில் இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது நினைவிருக்கலாம்.
திருமணம் முடிந்ததும் ஹன்சிகா, சோஹேலுடன் வாழ்ந்து வந்தார். ஆனால் இப்போது தனது தாயுடன் வசிப்பதற்காக அவர் தனது கணவரைப் பிரிந்து சென்றுவிட்டார். ஹன்சிகா மற்றும் சோஹேலின் காதல் கதை 'ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா' என்ற தலைப்பில் ஒரு ரியாலிட்டி ஷோவாக வெளியானது. இந்த நிகழ்ச்சியில், பாரிஸில் ஈஃபிள் கோபுரத்தின் கீழ் சோஹேல் தன் காதலை வெளிப்படுத்தியது முதல் அவர்களது திருமணம் வரை பல விஷயங்கள் காட்டப்பட்டன.

சோஹேலுக்கு ஏற்கெனவே ரிங்கி பஜாஜ் என்ற பெண்ணுடன் திருமணமாகி இருந்தது. அந்த ரிங்கி பஜாஜ், ஹன்சிகாவின் நெருங்கிய தோழி என கூறப்பட்டது. ரிங்கியை பிரிந்த பிறகுதான் ஹன்சிகாவை மணந்தார் சோஹேல். ஆனால், தற்போது இந்த திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டிருப்பதா பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டு முதல் சமூக வலைத்தளங்களில் சோஹேல் எந்தப் பதிவும் வெளியிடவில்லை. தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை ‘பிரைவேட்’ ஆக மாற்றியிருக்கிறார்.
திருமண முறிவு செய்திகள் குறித்து ஹன்சிகா மற்றும் சோஹேல் இருவரும் இதுவரை எந்தவித அதிகாரபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் ஹன்சிகா செய்த மாற்றங்களும், சோஹேலின் அமைதியும் இவர்களது பிரிவு குறித்த விவாதங்களை வலுப்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரம்.. மதுரை ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து.. உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு
திருப்பரங்குன்றம் விவகாரம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்
திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}