லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் முதல் முறையாக ஹனுமன் சாலீசா பாடப்பட்டது.
பாகேஷ்வர் தாம் பண்டிட் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி தலைமையில் இந்த ஹனுமன் சாலீசா பாடப்பட்டது. இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் ஹனுமன் சாலீசா முதன்முறையாக பாடப்பட்டது ஆகும். பண்டிட் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி முன்னிலையில் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் பலர் பக்தி சிரத்தையுடன் அனுமன் சாலீசா பாடினர். பாகேஷ்வர் இதை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்துள்ளார்.
தீரேந்திர சாஸ்திரி காவி உடை அணிந்து மந்திரங்களை சொல்ல, மற்றவர்கள் அவரை பின்பற்றி ஹனுமன் சாலீசா பாடினர். இந்த நிகழ்வின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தீரேந்திர சாஸ்திரியின் சர்வதேச சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமைந்தது. அவர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் ஆன்மீக நிகழ்வுகளிலும் சொற்பொழிவுகளிலும் கலந்து கொள்கிறார்.
இங்கிலாந்தில் இந்துக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இந்துக்கள் பலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். இந்திய வம்சவாள இந்துவான ரிஷி சுனாக் அந்த நாட்டின் பிரதமராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஹனுமன் சாலீசா பாடப்பட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}