லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் முதல் முறையாக ஹனுமன் சாலீசா பாடப்பட்டது.
பாகேஷ்வர் தாம் பண்டிட் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி தலைமையில் இந்த ஹனுமன் சாலீசா பாடப்பட்டது. இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் ஹனுமன் சாலீசா முதன்முறையாக பாடப்பட்டது ஆகும். பண்டிட் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி முன்னிலையில் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் பலர் பக்தி சிரத்தையுடன் அனுமன் சாலீசா பாடினர். பாகேஷ்வர் இதை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்துள்ளார்.

தீரேந்திர சாஸ்திரி காவி உடை அணிந்து மந்திரங்களை சொல்ல, மற்றவர்கள் அவரை பின்பற்றி ஹனுமன் சாலீசா பாடினர். இந்த நிகழ்வின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தீரேந்திர சாஸ்திரியின் சர்வதேச சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமைந்தது. அவர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் ஆன்மீக நிகழ்வுகளிலும் சொற்பொழிவுகளிலும் கலந்து கொள்கிறார்.
இங்கிலாந்தில் இந்துக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இந்துக்கள் பலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். இந்திய வம்சவாள இந்துவான ரிஷி சுனாக் அந்த நாட்டின் பிரதமராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஹனுமன் சாலீசா பாடப்பட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}