சென்னை: இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணிக்கு இன்று பிறந்த நாள். சமீபத்தில் மறைந்த அவர் குறித்து அவரது சித்தப்பா மகனும், அண்ணனுமான, இயக்குநர் வெங்கட் பிரபு ஹாப்பி பர்த்டே .... ஐ மிஸ் யூ தங்கச்சி என உருக்கமாக டிவீட் போட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி கடந்த 25ம் தேதி காலமானார். அவருக்கு வயது 47. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர், அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
குயில் போன்ற குரலுக்கு சொந்தக்காரர். ராசய்யா படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர். இவர் பாடிய மஸ்தானா மஸ்தானா பாடல் மிகப் பெரிய ஹிட்டாகியது. பலரது இசையில் பின்னணி பாடியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பின்னணி பாடியுள்ளார்.

இளையராஜா இசையில் பாரதி படத்தில் இவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்கு தேசிய விருதும் பெற்றுள்ளார். ஒரு சில படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். பவதாரிணியின் உடல் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பவதாரிணியின் பிறந்த நாளான இன்று இயக்குனர் வெங்கட் பிரபு உருக்கமான டுவிட் ஒன்றை போட்டுள்ளார். பவதாரிணியுடன் வெங்கட் பிரபு இருக்கும் படத்தை போட்டு, இனிய பிறந்த நாள் தங்கச்சி. நீ மகிழ்ச்சியான இடத்தில் இருப்பாய் என்று நம்புகிறோம்.. ஐ மிஸ் யூ சோ மச் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு நெட்டிசன்கள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}