சோகம் துடைக்கும் தேன்.. சுடர்விடும் சிந்தனைத் தூண்.. கவிஞன் எனும் மந்திரவாதி!

Mar 21, 2026,04:54 PM IST

- டாக்டர் கோ.லதா


மொழிகள் பலவாய் இருந்தாலும் 

உணர்வுகள் கவிதைக்கே உரியது 

எல்லைகள் இல்லாத உலகத்தில் 

அன்பை விதைக்கும் கவிதை 


மானுடம் போற்றும் மழலை

மனதின் ஆழத்து உணர்வு

கவிதை அது ஒரு கலை

கனிந்த இதயத்தின் மொழி


சோகம் துடைக்கும் தேன்

சுடர்விடும் சிந்தனைத் தூண்

கவிஞன் எனும் மந்திரவாதி

எழுத்துக்களால் எழில் செய்வான். 




காகிதத்தில் உயிர் தெறிக்கும் 

கற்பனை திறம் மலரும்

அமைதி சொல்லும் கவிதை 

அறம் போற்றும் கவிதை


பாரதியின் வாரிசுகளாய்

புதுமை பாடி மகிழ்வோம்

கவிதை தினமே மகிழ்

கவிதை வாசித்தே களி


நல்வாழ்வு தந்திடும் வரிகள் 

நம்பிக்கை ஊட்டிடும் கனிகள் 

கவிதையின் மகுடம் ஏற்றி

கவிதையாய் உலகை மாற்ற.....


இனிய சர்வதேச கவிதை தின வாழ்த்துக்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொகுதி மறுவரையறை.. அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு!

news

Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்

news

தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகள் ஏமாற்றம்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

news

புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனுடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் திடீர் சந்திப்பு

news

பிரதமர் மோடியின் 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணச் செலவு: மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

news

“வெற்றிப் பயணம் தொடரட்டும்!”: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

news

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: திமுக, தேமுதிக.,வின் கருத்து என்ன?

news

முருக பக்தியின் மகத்துவம் பேசும் ஆடி கிருத்திகை –காவடி, பால்குடம், பக்தி பேரலை

அதிகம் பார்க்கும் செய்திகள்