சோகம் துடைக்கும் தேன்.. சுடர்விடும் சிந்தனைத் தூண்.. கவிஞன் எனும் மந்திரவாதி!

Mar 21, 2026,04:54 PM IST

- டாக்டர் கோ.லதா


மொழிகள் பலவாய் இருந்தாலும் 

உணர்வுகள் கவிதைக்கே உரியது 

எல்லைகள் இல்லாத உலகத்தில் 

அன்பை விதைக்கும் கவிதை 


மானுடம் போற்றும் மழலை

மனதின் ஆழத்து உணர்வு

கவிதை அது ஒரு கலை

கனிந்த இதயத்தின் மொழி


சோகம் துடைக்கும் தேன்

சுடர்விடும் சிந்தனைத் தூண்

கவிஞன் எனும் மந்திரவாதி

எழுத்துக்களால் எழில் செய்வான். 




காகிதத்தில் உயிர் தெறிக்கும் 

கற்பனை திறம் மலரும்

அமைதி சொல்லும் கவிதை 

அறம் போற்றும் கவிதை


பாரதியின் வாரிசுகளாய்

புதுமை பாடி மகிழ்வோம்

கவிதை தினமே மகிழ்

கவிதை வாசித்தே களி


நல்வாழ்வு தந்திடும் வரிகள் 

நம்பிக்கை ஊட்டிடும் கனிகள் 

கவிதையின் மகுடம் ஏற்றி

கவிதையாய் உலகை மாற்ற.....


இனிய சர்வதேச கவிதை தின வாழ்த்துக்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

news

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

news

சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

news

10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ

news

புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி - அன்பழகன் நம்பிக்கை

news

தமிழகத்தில் குடிநீர் கேன் விலை உயர்வு: 20 ஆண்டுகளுக்குப் பிறகு உற்பத்தியாளர்கள் அதிரடி முடிவு

news

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள்: HRA சலுகை பெறுவதில் முக்கிய மாற்றங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்