ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு.. கீழே பிடித்துத் தள்ளிய கொடூரன்.. குற்றவாளி கைது!

Feb 07, 2025,03:24 PM IST

வேலூர்: வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கீழே தள்ளிய ஹேமராஜ் என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.


ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் 4 மாத கர்ப்பிணி பெண். இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணி புரிந்து வருகிறார். நேற்று தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக, கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். கர்ப்பிணி பெண் அமர்ந்திருந்த மகளிர் பெட்டியில் யாரும் இல்லாத காரணத்தினால், அங்கிருந்த இளைஞர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தொடர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர் அந்த பெண்ணை பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.




அந்த பெண் கழிவறைக்குச் செல்லும் போதும் தொடர்ந்து தொந்தரவு செய்த நிலையில், கர்ப்பிணி பெண் கூச்சலிட்டு உதவி கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த  அந்த நபர் கர்ப்பிணி பெண்ணை கே.வி.குப்பம் அருகே ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் அந்த பெண்ணின் கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. வலி தாங்காமல் அலறியதால், அப்பகுதி மக்கள், அந்த பெண்ணை மீட்டு உடனடியாக கே.வி.குப்பம் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணிற்கு கே.வி.குப்பம் மருத்துவமனையில்  முதலுதவி  அளிக்கப்பட்டது. அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டார்.


கே.வி.குப்பம் பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  ரயில்வே குற்றப்பதிவேட்டில் இருந்த புகைப்படங்களை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் காண்பித்தனர். அதில், ஹேமராஜ் என்பவரை அப்பெண் அடையாளம் காட்டியுள்ளார்.


அந்த பெண் அடையாளம் காண்பித்த ஹேமராஜ் என்பவர் மீது 2022ம் ஆண்டு ரயில் நிலையில்களில் செல்போன் பறிப்பு, ரயில் பயணிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உள்பட பல்வேறு வழக்குகளில் இவர் சம்பந்தப்பட்டிருப்பதும், தற்போது பிணையில்  வெளியே இருப்பதும் தெரிவந்தது. இதனையடுத்து, ஹேமராஜை போலீசார் தீவிரமாக தேடி கைது செய்தனர். ஹேமராஜ் மீது பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!

news

திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

news

சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்

news

நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!

news

கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!

news

சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு

news

வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!

news

SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்