குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து விலகுகிறாரா ஹர்டிக் பான்ட்யா?.. மும்பைக்குத் தாவ திட்டம்!

Nov 25, 2023,05:28 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக இருக்கும் ஹர்டிக் பான்ட்யா விரைவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தாவப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அணியில்தான் முதலில் இருந்தார் ஹர்டிக் பான்ட்யா என்பது நினைவிருக்கலாம்.


2 ஆண்டுகளாக அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆடி வந்தார்.  இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்டிக் பான்ட்யா3, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


ஐபிஎல் வீரர்கள் பரிமாற்ற நடைமுறைகள் நவம்பர் 26ம் தேதியுடன் முடிவடைகிறது.. அதாவது நாளையுடன் முடிவடைகிறது. எனவே ஹர்டிக் பான்ட்யா அணி மாறுவாரா இல்லையா என்பது நாளைக்குள் தெரிந்து விடும்.




மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 7 சீசன்களில் விளையாடிவர் ஹர்டிக் பான்ட்யா. கடந்த 2002ம் ஆண்டுதான் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்குச் சென்றார். அங்கு கேப்டனாக்கப்பட்டார். கடந்த 2 தொடர்களாக அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடி வந்தார்.  இதில் முதல் தொடரிலேயே குஜராத் அணி சாம்பியன் கோப்பையை வென்றது நினைவிருக்கலாம்.


மறுபக்கம் தற்போதைய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, டி20 போட்டிகளிலிருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளார். ஆனால் அது ஐபிஎல்லுக்குப் பொருந்துமா என்று தெரியவில்லை. ரோஹித் சர்மா தலைமையில்தான் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றது என்பது நினைவிருக்கலாம். ஒருவேளை ஹர்டிக் பான்ட்யா மும்பை அணியில் இடம் பெற்றால் அவர் கேப்டனாக்கப்படுவாரா அல்லது ரோஹித் தலைமையின் கீழ் விளையாடுவாரா என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்