சென்னை: குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக வலம் வந்து கொண்டிருந்த ஹர்டிக் பாண்ட்யாவை, மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி விட்டது. நேற்று இரவு வரை ஹர்டிக் பாண்ட்யாவை குஜராத் டைட்டன்ஸ்தான் வைத்திருந்தது, தக்கவும் வைத்திருந்தது. ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. இரவுக்கு மேல் ஹர்டிக், மும்பை பக்கம் வந்து விட்டார்.
தக்க வைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த பிறகுதான் ஹர்டிக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத்திடம் பேசி வாங்கியுள்ளதாக தெரிகிறது. நேற்று மாலைக்குள் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை தக்க வைப்பது, விலக்குவது குறித்து முடிவெடுக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.
ஹர்டிக் பாண்ட்யாவை விடுவிப்பதற்கு வசதியாக, தனது அணியில் இருந்த கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் விடுவித்தது. இதையடுத்து ஹர்டிக்கை விடுவித்தது குஜராத் டைட்டன்ஸ். கேமரூன் க்ரீனை தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வாங்கியுள்ளது. கடந்த ஆண்டு வீரர்கள் ஏலத்தின்போது பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்டவர் க்ரீன் என்பது நினைவிருக்கலாம்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் தொடர்ந்து இருந்து வந்தார் ஹர்டிக் பாண்ட்யா. கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக இருந்து வந்தார். இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் தொடரிலேயே ஹர்டிக் தலைமையில் அட்டகாசமாக ஆடி கோப்பையை வென்று அசத்தியது நினைவிருக்கலாம்.
ஐபிஎல் வரலாற்றிலேயே அறிமுகமான முதல் ஆண்டிலேயே கோப்பையை வென்றது இரண்டு அணிகள்தான். ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ், இன்னொன்று குஜராத் டைட்டன்ஸ். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவது ஐபிஎல் கோப்பையை வென்றது நினைவிருக்கலாம். ஷேன் வார்னே தலைமையில் அந்தக் கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}