சென்னை: குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக வலம் வந்து கொண்டிருந்த ஹர்டிக் பாண்ட்யாவை, மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி விட்டது. நேற்று இரவு வரை ஹர்டிக் பாண்ட்யாவை குஜராத் டைட்டன்ஸ்தான் வைத்திருந்தது, தக்கவும் வைத்திருந்தது. ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. இரவுக்கு மேல் ஹர்டிக், மும்பை பக்கம் வந்து விட்டார்.
தக்க வைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த பிறகுதான் ஹர்டிக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத்திடம் பேசி வாங்கியுள்ளதாக தெரிகிறது. நேற்று மாலைக்குள் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை தக்க வைப்பது, விலக்குவது குறித்து முடிவெடுக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.
ஹர்டிக் பாண்ட்யாவை விடுவிப்பதற்கு வசதியாக, தனது அணியில் இருந்த கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் விடுவித்தது. இதையடுத்து ஹர்டிக்கை விடுவித்தது குஜராத் டைட்டன்ஸ். கேமரூன் க்ரீனை தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வாங்கியுள்ளது. கடந்த ஆண்டு வீரர்கள் ஏலத்தின்போது பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்டவர் க்ரீன் என்பது நினைவிருக்கலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் தொடர்ந்து இருந்து வந்தார் ஹர்டிக் பாண்ட்யா. கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக இருந்து வந்தார். இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் தொடரிலேயே ஹர்டிக் தலைமையில் அட்டகாசமாக ஆடி கோப்பையை வென்று அசத்தியது நினைவிருக்கலாம்.
ஐபிஎல் வரலாற்றிலேயே அறிமுகமான முதல் ஆண்டிலேயே கோப்பையை வென்றது இரண்டு அணிகள்தான். ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ், இன்னொன்று குஜராத் டைட்டன்ஸ். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவது ஐபிஎல் கோப்பையை வென்றது நினைவிருக்கலாம். ஷேன் வார்னே தலைமையில் அந்தக் கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}