உங்களது அந்தரங்க புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டார்களா?.. 1930க்கு கால் பண்ணுங்க!

Nov 04, 2024,06:09 PM IST

சென்னை: தங்களின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து யாரேனும் மிரட்டினால் பெண்கள் தைரியமாக 1930 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.


இன்றைய நாகரீக உலகில் இன்டர்நெட், இமெயில் மற்றும் மொபைல் போன்கள் மூலம் ஆபத்துக்கள் அதிகம் வருகின்றன. நவீன நாகரீக இந்தியாவில் தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் நூதன முறையில், பண மோசடி செய்யும் கும்பல்கள் அதிகரித்து வருகின்றன. மொபைல் ஆப்பை பயன்படுத்தி தங்களது வங்கி கணக்கில் உள்ள பணங்களை அவர்களுடைய வங்கிகணக்கிற்கு மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 




அது மட்டும் இன்றி ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவர்களது மொபைல் போன்களில் உள்ள தகவல்களை பதிவிறக்கம் செய்து, அந்த படங்களை வைத்து மிரட்டி பணம் சம்பதித்து வருகின்றனர் ஒருசாரர். இந்த மோடி கும்பல்களிடம் சிக்கும் பெண்களிடம் இருந்து தங்களது அந்தரங்க புகைப்படங்களை வைத்து பிளாக்மொயில் செய்து பணம்பறிப்பதுடன், அவர்களை தவறான வழிக்கும் அழைத்து சொல்லும் நூதன முறைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. 


இந்த மோசடி கும்பல்களிடம் சிக்குபவர்கள் தங்களிடம் உள்ள கோடிக்கணக்கான பணங்களை இழக்கும் அளவிற்கு போகும் நிலையும் ஏற்படுகிறது. இத்தகைய சைபர் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 97 சைபர் கிரைம் குற்றங்கள் நடப்பதாக புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இந்நிலையில், உங்களின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து யாரேனும் மிரட்டினால் பெண்கள் தைரியமாக போலீஸில் புகார் அளிக்க அறிவுறுத்தப்படுள்ளனர். உங்களது மெளனத்தால் உங்கள் குற்றவாளி பலனடைகிறார் என்பதை அறிய வேண்டும் என எச்சரித்துள்ள காவல்துறை, 24 மணி நேரமும் இயங்கும் எங்களது உதவி எண் 1930 என்ற எண்ணை உங்களது உதவிக்கு அழைக்கலாம் என்றும் பெண்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


இதேபோல பெண்களுக்கு உதவுவதற்காக 181 என்ற உதவி எண்ணும் உள்ளது. பிரச்சினையில் சிக்கும் பெண்கள் அதையும் பயன்படுத்தலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்