உங்களது அந்தரங்க புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டார்களா?.. 1930க்கு கால் பண்ணுங்க!

Nov 04, 2024,06:09 PM IST

சென்னை: தங்களின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து யாரேனும் மிரட்டினால் பெண்கள் தைரியமாக 1930 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.


இன்றைய நாகரீக உலகில் இன்டர்நெட், இமெயில் மற்றும் மொபைல் போன்கள் மூலம் ஆபத்துக்கள் அதிகம் வருகின்றன. நவீன நாகரீக இந்தியாவில் தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் நூதன முறையில், பண மோசடி செய்யும் கும்பல்கள் அதிகரித்து வருகின்றன. மொபைல் ஆப்பை பயன்படுத்தி தங்களது வங்கி கணக்கில் உள்ள பணங்களை அவர்களுடைய வங்கிகணக்கிற்கு மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 




அது மட்டும் இன்றி ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவர்களது மொபைல் போன்களில் உள்ள தகவல்களை பதிவிறக்கம் செய்து, அந்த படங்களை வைத்து மிரட்டி பணம் சம்பதித்து வருகின்றனர் ஒருசாரர். இந்த மோடி கும்பல்களிடம் சிக்கும் பெண்களிடம் இருந்து தங்களது அந்தரங்க புகைப்படங்களை வைத்து பிளாக்மொயில் செய்து பணம்பறிப்பதுடன், அவர்களை தவறான வழிக்கும் அழைத்து சொல்லும் நூதன முறைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. 


இந்த மோசடி கும்பல்களிடம் சிக்குபவர்கள் தங்களிடம் உள்ள கோடிக்கணக்கான பணங்களை இழக்கும் அளவிற்கு போகும் நிலையும் ஏற்படுகிறது. இத்தகைய சைபர் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 97 சைபர் கிரைம் குற்றங்கள் நடப்பதாக புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இந்நிலையில், உங்களின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து யாரேனும் மிரட்டினால் பெண்கள் தைரியமாக போலீஸில் புகார் அளிக்க அறிவுறுத்தப்படுள்ளனர். உங்களது மெளனத்தால் உங்கள் குற்றவாளி பலனடைகிறார் என்பதை அறிய வேண்டும் என எச்சரித்துள்ள காவல்துறை, 24 மணி நேரமும் இயங்கும் எங்களது உதவி எண் 1930 என்ற எண்ணை உங்களது உதவிக்கு அழைக்கலாம் என்றும் பெண்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


இதேபோல பெண்களுக்கு உதவுவதற்காக 181 என்ற உதவி எண்ணும் உள்ளது. பிரச்சினையில் சிக்கும் பெண்கள் அதையும் பயன்படுத்தலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்