சென்னையில் மீண்டும் போராட்டத்தில் குதித்த தூய்மைப் பணியாளர்கள்.. கைது

Sep 04, 2025,03:17 PM IST

சென்னை : சென்னையில் போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


சென்னையில் உள்ள மாநகராட்சி மண்டலங்களில் தூய்மை செய்யும் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், பழைய ஊதியத்தை தங்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.


அனுமதியின்றி நடத்தும் போராட்டத்தால் நடைபாதையில் நடப்பதற்கு இடையூறாக இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அடுத்து, போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசாருக்கு கோர்ட் அறிவுறுத்தியது. இதையடுத்து ஆகஸ்ட் 14ம் தேதி ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 




பிறகு விடுவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுகட்டாயமாக கைது செய்து, போலீசார் அங்கிருந்து வெளியேற்றி உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்