சென்னை : சென்னையில் போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள மாநகராட்சி மண்டலங்களில் தூய்மை செய்யும் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், பழைய ஊதியத்தை தங்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
அனுமதியின்றி நடத்தும் போராட்டத்தால் நடைபாதையில் நடப்பதற்கு இடையூறாக இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அடுத்து, போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசாருக்கு கோர்ட் அறிவுறுத்தியது. இதையடுத்து ஆகஸ்ட் 14ம் தேதி ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பிறகு விடுவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுகட்டாயமாக கைது செய்து, போலீசார் அங்கிருந்து வெளியேற்றி உள்ளனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}