சென்னை : சென்னையில் போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள மாநகராட்சி மண்டலங்களில் தூய்மை செய்யும் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், பழைய ஊதியத்தை தங்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
அனுமதியின்றி நடத்தும் போராட்டத்தால் நடைபாதையில் நடப்பதற்கு இடையூறாக இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அடுத்து, போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசாருக்கு கோர்ட் அறிவுறுத்தியது. இதையடுத்து ஆகஸ்ட் 14ம் தேதி ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பிறகு விடுவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுகட்டாயமாக கைது செய்து, போலீசார் அங்கிருந்து வெளியேற்றி உள்ளனர்.
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!
தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!
பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்
மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!
தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!
உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி
சித்திரையும் வெயிலும்!
{{comments.comment}}