சென்னை: தமிழ்நாட்டில் கடும் வெயில் இப்போதைக்கு முடிவுக்கு வராது போல. கரூர், தர்மபுரி மாவட்டங்களில் வெப்ப அலை வீச்சு நிலவியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோடைகாலம் கொளுத்தி எடுத்து வருகிறது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. அந்த அளவுக்கு வெயில் வறுத்தெடுக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கரூர், தர்மபுரி மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
9 நகரங்களில் உச்சகட்ட வெப்ப நிலை பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 41.5 டிகிரி செல்சியஸ் அதாவது 107 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. திருப்பத்தூரில் 107, கரூர் பரமத்தியில் 106, வேலூரில் 105 டிகிரி வெயில் அடித்துள்ளது. தர்மபுரி, ஈரோட்டில் தலா 105 டிகிரி வெயில் பதிவானது. அதேபோல திருச்சியிலும் 105 டிகிரி அளவுக்கு வெயில் வெளுத்துள்ளது.
திருத்தணி, நாமக்கல் நகரங்களில் தலா 104 டிகிரி அளவுக்கு வெயில் பதிவானது. மதுரை, சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூரில் 102 முதல் 103 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வெயில் அளவு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் பெரிய அளவில் மாற்றமில்லை. அடுத்த 5 நாட்களில் வெயிலின் அளவானது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}