சென்னை: தமிழ்நாட்டில் கடும் வெயில் இப்போதைக்கு முடிவுக்கு வராது போல. கரூர், தர்மபுரி மாவட்டங்களில் வெப்ப அலை வீச்சு நிலவியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோடைகாலம் கொளுத்தி எடுத்து வருகிறது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. அந்த அளவுக்கு வெயில் வறுத்தெடுக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கரூர், தர்மபுரி மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
9 நகரங்களில் உச்சகட்ட வெப்ப நிலை பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 41.5 டிகிரி செல்சியஸ் அதாவது 107 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. திருப்பத்தூரில் 107, கரூர் பரமத்தியில் 106, வேலூரில் 105 டிகிரி வெயில் அடித்துள்ளது. தர்மபுரி, ஈரோட்டில் தலா 105 டிகிரி வெயில் பதிவானது. அதேபோல திருச்சியிலும் 105 டிகிரி அளவுக்கு வெயில் வெளுத்துள்ளது.
திருத்தணி, நாமக்கல் நகரங்களில் தலா 104 டிகிரி அளவுக்கு வெயில் பதிவானது. மதுரை, சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூரில் 102 முதல் 103 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வெயில் அளவு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் பெரிய அளவில் மாற்றமில்லை. அடுத்த 5 நாட்களில் வெயிலின் அளவானது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}