சென்னை: தமிழ்நாட்டில் கடும் வெயில் இப்போதைக்கு முடிவுக்கு வராது போல. கரூர், தர்மபுரி மாவட்டங்களில் வெப்ப அலை வீச்சு நிலவியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோடைகாலம் கொளுத்தி எடுத்து வருகிறது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. அந்த அளவுக்கு வெயில் வறுத்தெடுக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கரூர், தர்மபுரி மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

9 நகரங்களில் உச்சகட்ட வெப்ப நிலை பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 41.5 டிகிரி செல்சியஸ் அதாவது 107 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. திருப்பத்தூரில் 107, கரூர் பரமத்தியில் 106, வேலூரில் 105 டிகிரி வெயில் அடித்துள்ளது. தர்மபுரி, ஈரோட்டில் தலா 105 டிகிரி வெயில் பதிவானது. அதேபோல திருச்சியிலும் 105 டிகிரி அளவுக்கு வெயில் வெளுத்துள்ளது.
திருத்தணி, நாமக்கல் நகரங்களில் தலா 104 டிகிரி அளவுக்கு வெயில் பதிவானது. மதுரை, சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூரில் 102 முதல் 103 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வெயில் அளவு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் பெரிய அளவில் மாற்றமில்லை. அடுத்த 5 நாட்களில் வெயிலின் அளவானது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}