சென்னை: வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும் எனவும், தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்கள் வெப்ப அலை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெயில் ஆரம்பித்தாலே கோடை காலம் தொடங்கிவிட்டது தான். அதிலும் வெயில் உச்சத்தை தொட்டால் அது அக்னி நட்சத்திர காலகட்டம் தான். ஆனால் தற்போது எதிர் மாறாக அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பிருந்தே வெப்ப அலை கடுமையாக வீசி வருகிறது. இதன் தாக்கம் மே இறுதிவரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. மக்கள் இதனை சமாளிக்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீச கூடும். அப்போது 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும். இதர மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும். மேலும் கடலோர மாவட்டங்களில் 100 டிகிரி வரை வெயில் கொளுத்தும். தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வெப்ப அலை உயர வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமுடன் செயல்பட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
நேற்று அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் 110 டிகிரி வரை வெப்பம் பதிவானது. இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் 15 இடங்களில் வெயில் சதமடித்ததுள்ளது.
மழை நிலவரம்:
தமிழ்நாட்டின் மேல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால் மூன்று நாட்கள் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இன்று நீலகிரி, தர்மபுரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆகிய ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.
நாளை கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
சென்னை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய கூடும். தெற்கு மற்றும் வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}