மே மாத இறுதி வரை வெயிலுக்கு என்டே இல்லை.. 5 நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்.. வானிலை மையம்

May 07, 2024,10:50 AM IST

சென்னை: வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும் எனவும், தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்கள் வெப்ப அலை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


வெயில் ஆரம்பித்தாலே கோடை காலம் தொடங்கிவிட்டது தான். அதிலும் வெயில் உச்சத்தை தொட்டால் அது அக்னி நட்சத்திர காலகட்டம் தான். ஆனால் தற்போது எதிர் மாறாக அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பிருந்தே வெப்ப அலை கடுமையாக வீசி வருகிறது. இதன் தாக்கம் மே இறுதிவரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. மக்கள் இதனை சமாளிக்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்த சூழ்நிலையில் வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீச கூடும். அப்போது 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும். இதர மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை  வெயில் கொளுத்தும். மேலும் கடலோர மாவட்டங்களில் 100 டிகிரி வரை வெயில் கொளுத்தும். தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வெப்ப அலை உயர வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமுடன் செயல்பட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.




நேற்று அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் 110 டிகிரி வரை வெப்பம் பதிவானது. இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் 15 இடங்களில் வெயில் சதமடித்ததுள்ளது.


மழை நிலவரம்:


தமிழ்நாட்டின் மேல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால் மூன்று நாட்கள் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.


இன்று நீலகிரி, தர்மபுரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆகிய ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.


நாளை கோவை,  தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.


சென்னை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய கூடும். தெற்கு மற்றும் வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்