சென்னை: வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும் எனவும், தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்கள் வெப்ப அலை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெயில் ஆரம்பித்தாலே கோடை காலம் தொடங்கிவிட்டது தான். அதிலும் வெயில் உச்சத்தை தொட்டால் அது அக்னி நட்சத்திர காலகட்டம் தான். ஆனால் தற்போது எதிர் மாறாக அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பிருந்தே வெப்ப அலை கடுமையாக வீசி வருகிறது. இதன் தாக்கம் மே இறுதிவரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. மக்கள் இதனை சமாளிக்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீச கூடும். அப்போது 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும். இதர மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும். மேலும் கடலோர மாவட்டங்களில் 100 டிகிரி வரை வெயில் கொளுத்தும். தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வெப்ப அலை உயர வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமுடன் செயல்பட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

நேற்று அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் 110 டிகிரி வரை வெப்பம் பதிவானது. இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் 15 இடங்களில் வெயில் சதமடித்ததுள்ளது.
மழை நிலவரம்:
தமிழ்நாட்டின் மேல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால் மூன்று நாட்கள் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இன்று நீலகிரி, தர்மபுரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆகிய ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.
நாளை கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
சென்னை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய கூடும். தெற்கு மற்றும் வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
{{comments.comment}}