சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்று முதல் ஐந்து நாட்கள் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தலைவலி, தலைசுற்றல் ,சோர்வு அஜீரண கோளாறு, ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வெப்பத்தை மக்கள் சமாளிக்க, குடிநீர் பந்தல் அமைத்தல், ஓஆர்எஸ் கரைசல் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
நேற்றைய தினம் மட்டும் தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹூட்டையும் தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்:
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் மூன்று நாட்கள் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீச கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும். அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் வெயில் அளவு 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் எனவும் அறிவித்துள்ளது.
இது தவிர தமிழ்நாட்டில் இன்று முதல் ஏழு நாட்கள் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}