சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்று முதல் ஐந்து நாட்கள் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தலைவலி, தலைசுற்றல் ,சோர்வு அஜீரண கோளாறு, ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வெப்பத்தை மக்கள் சமாளிக்க, குடிநீர் பந்தல் அமைத்தல், ஓஆர்எஸ் கரைசல் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
நேற்றைய தினம் மட்டும் தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹூட்டையும் தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்:

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் மூன்று நாட்கள் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீச கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும். அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் வெயில் அளவு 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் எனவும் அறிவித்துள்ளது.
இது தவிர தமிழ்நாட்டில் இன்று முதல் ஏழு நாட்கள் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}