சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்று முதல் ஐந்து நாட்கள் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தலைவலி, தலைசுற்றல் ,சோர்வு அஜீரண கோளாறு, ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வெப்பத்தை மக்கள் சமாளிக்க, குடிநீர் பந்தல் அமைத்தல், ஓஆர்எஸ் கரைசல் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
நேற்றைய தினம் மட்டும் தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹூட்டையும் தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்:

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் மூன்று நாட்கள் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீச கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும். அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் வெயில் அளவு 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் எனவும் அறிவித்துள்ளது.
இது தவிர தமிழ்நாட்டில் இன்று முதல் ஏழு நாட்கள் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம்.
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஓடும் நதி ஓசையிலே.. தோடி ராகம் கேட்குதே!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
குழந்தை
புதுவருட டைரி!
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
{{comments.comment}}