டில்லி : கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும், தென்னிந்திய மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கல் தினசரி உக்கிரம் அடைந்து வருகிறது. பல நகரில் தினசரி வெப்பநிலையே 100 டிகிரியை தாண்டி காணப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே நிலை தான். இதனால் பொது மக்கள் கவனமாக இருக்கும் படி இந்திய வானிலை மையமும், அரசு துறைகளும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.
இந்நிலையில் இன்றும் நாளையும் நாடு முழுவதும் கடும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதோடு மேற்கு வங்கம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ளது. மக்கள் அதிகமான தண்ணீர் அருந்த வேண்டும் என்றும், பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வட தமிழகத்தின் உள் மாவட்டங்களி அடுத்த 4 நாட்களுக்கு 109 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என்றும், மற்ற மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}