டில்லி : கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும், தென்னிந்திய மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கல் தினசரி உக்கிரம் அடைந்து வருகிறது. பல நகரில் தினசரி வெப்பநிலையே 100 டிகிரியை தாண்டி காணப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே நிலை தான். இதனால் பொது மக்கள் கவனமாக இருக்கும் படி இந்திய வானிலை மையமும், அரசு துறைகளும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

இந்நிலையில் இன்றும் நாளையும் நாடு முழுவதும் கடும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதோடு மேற்கு வங்கம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ளது. மக்கள் அதிகமான தண்ணீர் அருந்த வேண்டும் என்றும், பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வட தமிழகத்தின் உள் மாவட்டங்களி அடுத்த 4 நாட்களுக்கு 109 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என்றும், மற்ற மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}