டில்லி : கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும், தென்னிந்திய மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கல் தினசரி உக்கிரம் அடைந்து வருகிறது. பல நகரில் தினசரி வெப்பநிலையே 100 டிகிரியை தாண்டி காணப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே நிலை தான். இதனால் பொது மக்கள் கவனமாக இருக்கும் படி இந்திய வானிலை மையமும், அரசு துறைகளும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

இந்நிலையில் இன்றும் நாளையும் நாடு முழுவதும் கடும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதோடு மேற்கு வங்கம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ளது. மக்கள் அதிகமான தண்ணீர் அருந்த வேண்டும் என்றும், பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வட தமிழகத்தின் உள் மாவட்டங்களி அடுத்த 4 நாட்களுக்கு 109 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என்றும், மற்ற மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}