டெல்லி: டெல்லியில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பகலில் கூட வாகனங்களை கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வட இந்தியா முழுவதும் பரவலாக பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடும்பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இமயமலையில் உள்ள பனிக்கட்டிகள் அதிகளவில் உருகி வருவதினால், இதன் தாக்கம் டெல்லியில் எதிரொலித்துள்ளது. அத்துடன் பனிபொழிவுடன் காற்றும் அதிகமாக இருப்பதினால் குளிரின் தாக்கம் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இந்தாண்டு உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் குளிர் அதிகமாக இருப்பதினால், மக்கள் பனியை தாங்க முடியாமல் ஆங்காங்கே நெருப்பை மூட்டி குளிரை தனித்து வருகின்றனர். இந்த பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரயில் மற்றும் விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ள பயணிகள் மிகவும் பாதிப்புக்களாகி வருகின்றனர்.
இந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு வட இந்தியாவில் பல மாநிலங்களில் கடுமையாகன பனிபொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நேற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து இன்றும் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக நகரின் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி என்ற அளவில் இருக்கிறது. குறைந்த பட்ச வெப்பநிலையாக 8 டிகிரி முதல் 7 டிகிரியாகவும், அதற்கும் கீழும் செல்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}