டெல்லியில் கடும் பனிமூட்டம்... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Jan 04, 2025,11:17 AM IST

டெல்லி: டெல்லியில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பகலில் கூட வாகனங்களை கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர்.


கடந்த சில நாட்களாக வட இந்தியா முழுவதும் பரவலாக பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடும்பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இமயமலையில் உள்ள பனிக்கட்டிகள் அதிகளவில் உருகி வருவதினால், இதன் தாக்கம் டெல்லியில் எதிரொலித்துள்ளது. அத்துடன் பனிபொழிவுடன் காற்றும் அதிகமாக இருப்பதினால்  குளிரின் தாக்கம் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இந்தாண்டு உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.




காலை மற்றும் மாலை நேரங்களில் குளிர் அதிகமாக இருப்பதினால், மக்கள் பனியை தாங்க முடியாமல் ஆங்காங்கே நெருப்பை மூட்டி குளிரை தனித்து வருகின்றனர். இந்த பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரயில் மற்றும் விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ள பயணிகள் மிகவும் பாதிப்புக்களாகி வருகின்றனர்.


இந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு வட இந்தியாவில் பல மாநிலங்களில் கடுமையாகன பனிபொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நேற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து இன்றும் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக நகரின் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி என்ற அளவில் இருக்கிறது. குறைந்த பட்ச வெப்பநிலையாக 8 டிகிரி முதல் 7 டிகிரியாகவும், அதற்கும் கீழும் செல்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்

news

விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை... கூட்டணி குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!

news

விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடனா?: சீமான் கண்டனம்

news

முருக பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி: ஜூன் 22ல் மதுரையில் பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு!

news

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்.. குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்: முதலமைச்சர் முக ஸ்டாலின்

news

பட புரோமோஷனுக்காக புடவையில் வந்த கஜோல்... விலையை கேட்டால் அப்டியே மயங்கிருவீங்க!

news

கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!

news

தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்