லில்லி மலருக்குக் கொண்டாட்டம்.. ஏன்னா.. ஊட்டியில் செம மழை.. சுற்றுலா பயணிகளும் ஹேப்பிங்கோ!

May 03, 2024,06:23 PM IST

ஊட்டி: கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், ஊட்டியில் இன்று கிட்டத்தட்ட அரை மணி நேரம் விடாமல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைந்தனர். சுற்றுலாப் பயணிகள் குஷியாகி விட்டனர்.


கடந்த சில நாட்களாகவே அனைத்து மாவட்டங்களிலும் வெயில் சக்கை போடு போட்டு வருகின்றது. இதனால் கடும் வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள ஊட்டி, கொடைக்கானல் என்று மக்கள் சுற்றுலா செல்வது வழக்கம். அப்படித்தான் இந்த வருடமும் மக்கள் கோடை வாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்து வந்தனர். ஆனால், ஆங்கேயும் வெயில் வழக்கத்தை விட வாட்டி வதைத்து வந்தது. இதனால் சுற்றுலா சென்றவர்கள் கடுப்பானார்கள்.


வழக்கத்திற்கு மாறாக கோடை வாசஸ்தலங்களிலும் வெயில் அதிகமாக காணப்பட்டதால் மிகவும் கவலையுடன் காணப்பட்டனர். மேலும், வெயில் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடும் ஊட்டியில் அதிகரித்தது. இதனால் பல விடுதிகள் மூடப்பட்டன. இதனால் சுற்றுலா சென்றவர்கள் மட்டும் இன்றி உள்ளூர்வாசிகளும் மிகவும் கவலை அடைந்தனர். சீசன் களைகட்டும் நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விடுதிகள் மூடப்பட்டதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.




இந்நிலையில், ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்ததினால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஊட்யியின் புறநகர் பகுதிகளிலும் இடியுடன் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்தது. பிங்கர் போஸ்ட், ஹெல்கில், மஞ்சன கொரை, முத்தொரை பாலாடா, மேல்கவ்வட்டி ஆகிய இடங்களில் இடியுடன் கூடி மழை பெய்தது. 


இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஓசூர், பேரிகை பாகலூர், சூளகிரி உத்தனப்பள்ளி பகுதியில் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் வெக்கை தணிந்து மக்கள் மனதில் உவகை குடியேறியது.

சமீபத்திய செய்திகள்

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

ஆதலால் காதல் செய்வீர்!

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்