கோவை: பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 6000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து , கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கோடை மழை தற்போது தமிழகம் முழுவதிலும் பரவலாக பெய்து வருகிறது. இந்த கன மழை காரணமாக கோடைகாலமா? மழை காலமா? என்ற ஐய்யம் ஏற்படும் அளவிற்கு தற்போதைய கிளைமேட் உள்ளது. தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இந்த நீர் வரத்தால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுள்ளது.

பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியாக உள்ள நிலையில், தற்போது அதன் நீர்மட்டம் 94.5 அடியாக உயர்ந்துள்ளது. அதில் 40 அடி சேறும், சகதியுமாகவே இருக்கும். முன்னர் எல்லாம் பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்கு நீர் திறந்து விடப்படும். கோடை காலத்தில் வெயில் அதிகமாகி நீர் மட்டம் குறைந்ததினால் நீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வருவதால், அணையின் நீர் மட்டம் மடமட வென உயர்ந்தது.
இதை அடுத்து பில்லூர் அணை திறக்கப்பட்டுள்ளது. அதுவும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து , தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற வெள்ள அபாய எச்சரிக்கை விடபப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தேக்கம்பட்டி, ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினாம்பாளையம், சிறுமுகை ஆலங்கொம்பு பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}