கோவை: கோவை மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதியில் திடீர் கனமழை பெய்தது. கன மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கன மழை காரணமாக அவினாசி சாலை சுரங்கப்பாதையில்தண்ணீர் சூழ்ந்ததால் சுரங்கப்பாதை மூடப்பட்டது.
கோவையில் நேற்று திடீர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கோவையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது இடி மின்னலுடன் கனமழை பெய்து வருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென மாலை நேரத்தில் சுமார் 3 மணி நேரம் பலத்த காற்று , இடியுடன் கனமழை பெய்தது.
இதனால் அவிநாசி சாலை, லங்கா கார்னர், கிக்கானிக் பள்ளி சுரங்க பாதைகள் நீரில் மூழ்கின. அங்கு போக்குவரத்து முற்றிலுமாக தூண்டிக்கப்பட்டது. இதனால் சுரங்கப் பாதையில் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தில் திருப்பி விடப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அவிநாசி சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. திருச்சி செல்லும் வாகனங்களும் செல்ல முடியவில்லை. மேலும், பள்ளி முடிந்து பேருந்திற்காக காத்திருந்த மாணவ, மாணவிகள் தண்ணீரிலேயே நீ்ண்ட நேரம் காத்திருந்தனர். கோவையில் பல்வேறு பாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மழை நீருடன் கழிவு நீர் கலந்து சென்றதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். 3 மணி நேரம் பெய்த கனமழைகே கோவையில் பல்வேறு பணிகள் ஸ்தம்பித்தன.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதிலும் பரவலாக மிதமான மற்றும் கனமழை பொழியும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}