மழை இப்ப அந்தப் பக்கம் போய்ருச்சு.. திண்டாடிப் போன கோவை.. அவினாசி சுரங்கப்பாதை மூடல்!

Dec 09, 2023,12:45 PM IST

கோவை: கோவை மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதியில் திடீர்  கனமழை பெய்தது. கன மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கன மழை காரணமாக அவினாசி சாலை சுரங்கப்பாதையில்தண்ணீர் சூழ்ந்ததால் சுரங்கப்பாதை மூடப்பட்டது. 


கோவையில் நேற்று திடீர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  கோவையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது இடி மின்னலுடன் கனமழை பெய்து வருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென மாலை நேரத்தில் சுமார் 3 மணி நேரம் பலத்த காற்று ,  இடியுடன் கனமழை பெய்தது. 


இதனால் அவிநாசி சாலை, லங்கா கார்னர், கிக்கானிக் பள்ளி சுரங்க பாதைகள் நீரில் மூழ்கின. அங்கு போக்குவரத்து முற்றிலுமாக தூண்டிக்கப்பட்டது. இதனால் சுரங்கப் பாதையில் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தில் திருப்பி விடப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 




அவிநாசி சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. திருச்சி  செல்லும் வாகனங்களும் செல்ல முடியவில்லை. மேலும், பள்ளி முடிந்து பேருந்திற்காக காத்திருந்த மாணவ, மாணவிகள் தண்ணீரிலேயே நீ்ண்ட நேரம் காத்திருந்தனர்.  கோவையில் பல்வேறு பாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மழை நீருடன் கழிவு நீர் கலந்து சென்றதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். 3 மணி நேரம் பெய்த கனமழைகே கோவையில் பல்வேறு பணிகள் ஸ்தம்பித்தன. 


தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு  தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதிலும் பரவலாக மிதமான மற்றும் கனமழை பொழியும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்