அடுத்த 5 நாட்களுக்கு.. 17 மாவட்டங்களில் மழை இருக்கு.. சென்னைக்கும் உண்டு பாஸ்!

Mar 25, 2023,03:20 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு 17 மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

25ம் தேதியான இன்று லேசானது முதல் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, தென்காசி மாவட்டங்களில்  நல்ல மழை பெய்துள்ளது.



26ம் தேதியான நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

27 மற்றும் 28 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

29ம் தேதி மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

news

தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

news

டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்