அடுத்த 5 நாட்களுக்கு.. 17 மாவட்டங்களில் மழை இருக்கு.. சென்னைக்கும் உண்டு பாஸ்!

Mar 25, 2023,03:20 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு 17 மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

25ம் தேதியான இன்று லேசானது முதல் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, தென்காசி மாவட்டங்களில்  நல்ல மழை பெய்துள்ளது.



26ம் தேதியான நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

27 மற்றும் 28 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

29ம் தேதி மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

புதுவருட டைரி!

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்