அடுத்த 5 நாட்களுக்கு.. 17 மாவட்டங்களில் மழை இருக்கு.. சென்னைக்கும் உண்டு பாஸ்!

Mar 25, 2023,03:20 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு 17 மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

25ம் தேதியான இன்று லேசானது முதல் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, தென்காசி மாவட்டங்களில்  நல்ல மழை பெய்துள்ளது.



26ம் தேதியான நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

27 மற்றும் 28 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

29ம் தேதி மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்