மக்களே கவனம்..  இன்னும் 3 நாளைக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்குமாம்!

Nov 07, 2023,04:42 PM IST


சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 


தென்கிழக்கு மற்றும் அரபிக்கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு மேல் பகுதிகளில் ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த கீழடுக்கு சுழற்சி ஏற்கனவே வங்கக்கடலில் இருந்தது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது அரபிக் கடலில் நிலவி வருகிறது.




மேலும் காற்றின் ஈர்ப்பின் காரணமாக உள் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை தொடரும் என அறிவித்துள்ளது.


தென் மாவட்டங்களில் தொடரும் கனமழையால் நாளை மற்றும் நாளை மறுதினம் நீலகிரி ,திண்டுக்கல், தேனி ,திருப்பூர், கோவை, விருதுநகர், மதுரை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.


சென்னையை பொருத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Short Story: புதுமைப்பெண்!

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

ஆதலால் காதல் செய்வீர்!

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

அதிகம் பார்க்கும் செய்திகள்