மக்களே கவனம்..  இன்னும் 3 நாளைக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்குமாம்!

Nov 07, 2023,04:42 PM IST


சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 


தென்கிழக்கு மற்றும் அரபிக்கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு மேல் பகுதிகளில் ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த கீழடுக்கு சுழற்சி ஏற்கனவே வங்கக்கடலில் இருந்தது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது அரபிக் கடலில் நிலவி வருகிறது.




மேலும் காற்றின் ஈர்ப்பின் காரணமாக உள் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை தொடரும் என அறிவித்துள்ளது.


தென் மாவட்டங்களில் தொடரும் கனமழையால் நாளை மற்றும் நாளை மறுதினம் நீலகிரி ,திண்டுக்கல், தேனி ,திருப்பூர், கோவை, விருதுநகர், மதுரை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.


சென்னையை பொருத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்