மக்களே கவனம்..  இன்னும் 3 நாளைக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்குமாம்!

Nov 07, 2023,04:42 PM IST


சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 


தென்கிழக்கு மற்றும் அரபிக்கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு மேல் பகுதிகளில் ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த கீழடுக்கு சுழற்சி ஏற்கனவே வங்கக்கடலில் இருந்தது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது அரபிக் கடலில் நிலவி வருகிறது.




மேலும் காற்றின் ஈர்ப்பின் காரணமாக உள் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை தொடரும் என அறிவித்துள்ளது.


தென் மாவட்டங்களில் தொடரும் கனமழையால் நாளை மற்றும் நாளை மறுதினம் நீலகிரி ,திண்டுக்கல், தேனி ,திருப்பூர், கோவை, விருதுநகர், மதுரை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.


சென்னையை பொருத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்