சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு மற்றும் அரபிக்கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு மேல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த கீழடுக்கு சுழற்சி ஏற்கனவே வங்கக்கடலில் இருந்தது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது அரபிக் கடலில் நிலவி வருகிறது.
மேலும் காற்றின் ஈர்ப்பின் காரணமாக உள் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை தொடரும் என அறிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் தொடரும் கனமழையால் நாளை மற்றும் நாளை மறுதினம் நீலகிரி ,திண்டுக்கல், தேனி ,திருப்பூர், கோவை, விருதுநகர், மதுரை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}