மக்களே கவனம்..  இன்னும் 3 நாளைக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்குமாம்!

Nov 07, 2023,04:42 PM IST


சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 


தென்கிழக்கு மற்றும் அரபிக்கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு மேல் பகுதிகளில் ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த கீழடுக்கு சுழற்சி ஏற்கனவே வங்கக்கடலில் இருந்தது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது அரபிக் கடலில் நிலவி வருகிறது.




மேலும் காற்றின் ஈர்ப்பின் காரணமாக உள் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை தொடரும் என அறிவித்துள்ளது.


தென் மாவட்டங்களில் தொடரும் கனமழையால் நாளை மற்றும் நாளை மறுதினம் நீலகிரி ,திண்டுக்கல், தேனி ,திருப்பூர், கோவை, விருதுநகர், மதுரை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.


சென்னையை பொருத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்