மழை வருது மழை வருது.. மறக்காம குடையுடன் போங்க.. இன்றும், நாளையும் கன மழைக்கான.. எல்லோ அலர்ட்!

Aug 12, 2024,06:40 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கன மழைக்கான எல்லோ அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

அதேபோல் தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம்.

தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வாரமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம் விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இதமான சூழ்நிலை நிலவி வருவதுடன் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. 

பெரும்பான பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இரவில் பெய்யும் மழையால்  பல கிராமங்களில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதால்  மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோல் கொடைக்கானலிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மழையில் நனைந்தபடியே படகு சவாரி செய்தனர்.



இந்த நிலையில் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்ய  வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மழை குறித்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது ஏழு முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்றும் நாளையும் எல்லோ அலாட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று கனமழை: 

மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம்,கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிக கனமழை: 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் அதிகாலை வரை விட்டு விட்டுப் பரவலாக மழை பெய்ததால் குளுமையான சூழல் நிலவி வருகிறது. காலையில் மீண்டும் வெயில் அடித்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)

news

மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்