திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் 100 மிமீ மேலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், வயநாட்டில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் கூட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்போது நடந்து வருகிறது. மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.மேலும். சூலூரில் இருந்தும் 2 ஹெலிகாப்டர்கள் கொண்டுவரப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பட்டுள்ளது.
வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகியபகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு எற்பட்டுள்ளன. இந்த நிலசரிவில் சிக்கி 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வந்த 1000த்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் தொடரந்து கன மழை பெய்து வருவதால் ரயில் சேவையை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எர்ணாகுளம்-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் ஆலுவா இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்-ஷோரனூர் இடையேயான வேணாடு எக்ஸ்பிரஸ் சாலக்குடியில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}