கேரளாவில் கனமழை - வயநாட்டில் நிலச்சரிவு - ரெட் அலர்ட் எச்சரிக்கை.. பல ரயில்கள் ரத்து

Jul 30, 2024,12:42 PM IST

திருவனந்தபுரம்:   கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


கேரள மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் 100 மிமீ மேலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், வயநாட்டில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் கூட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.




நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்போது நடந்து வருகிறது. மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.மேலும். சூலூரில் இருந்தும் 2  ஹெலிகாப்டர்கள் கொண்டுவரப்பட்டு  மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பட்டுள்ளது.


வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகியபகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு எற்பட்டுள்ளன. இந்த நிலசரிவில் சிக்கி 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வந்த 1000த்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


கேரளாவில் தொடரந்து கன மழை பெய்து வருவதால் ரயில் சேவையை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எர்ணாகுளம்-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் ஆலுவா இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்-ஷோரனூர் இடையேயான வேணாடு எக்ஸ்பிரஸ் சாலக்குடியில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்