காலையிலேயேவா.. மதுரை சிவகங்கை மற்றும் காரைக்குடியை.. திடீரென நனைத்த கன மழை!

Jan 20, 2024,09:52 AM IST

மதுரை: மதுரை,சிவகங்கை மற்றும் காரைக்குடியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்ததால் மக்கள் சர்ப்பிரைஸ் ஆகி விட்டனர். சிவகாசி உள்ளிட்ட பகுதிகளிலும் கூட நல்ல மழை பெய்துள்ளது.


தமிழகத்தில் முழுவதும் இன்று ஒரு சில மாவட்டங்களில் பனி மூட்டம் மற்றும் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.




இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், இன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.


ஜனவரி 21 முதல் 25ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்திருந்தது.


ஜிலுஜிலு மழை:  இந்நிலையில், இன்று காலை முதல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை, சிவகங்கை மற்றும் காரைக்காலில் இன்று அதிகாலையில் இருந்து கனமழை பெய்தது. 


அதேபோல விருதுநகர் மாவட்டத்திலும் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 


வட கிழக்கு பருவ மழை தமிழகத்தில் இந்த வருடம் நல்ல மழையை கொடுத்த நிலையில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் கன மழை பெய்து வருகிறது.


சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்