மதுரை: மதுரை,சிவகங்கை மற்றும் காரைக்குடியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்ததால் மக்கள் சர்ப்பிரைஸ் ஆகி விட்டனர். சிவகாசி உள்ளிட்ட பகுதிகளிலும் கூட நல்ல மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் முழுவதும் இன்று ஒரு சில மாவட்டங்களில் பனி மூட்டம் மற்றும் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், இன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.
ஜனவரி 21 முதல் 25ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
ஜிலுஜிலு மழை: இந்நிலையில், இன்று காலை முதல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை, சிவகங்கை மற்றும் காரைக்காலில் இன்று அதிகாலையில் இருந்து கனமழை பெய்தது.
அதேபோல விருதுநகர் மாவட்டத்திலும் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வட கிழக்கு பருவ மழை தமிழகத்தில் இந்த வருடம் நல்ல மழையை கொடுத்த நிலையில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் கன மழை பெய்து வருகிறது.
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
{{comments.comment}}