தென் சென்னையில் ஏன் திடீர்னு இவ்வளவு பெரிய மழை தெரியுமா

Nov 03, 2023,11:15 AM IST
சென்னை: சென்னை நகரில் காலையிலிருந்து திடீரென அதிக அளவில் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருப்பதால் மக்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர். 

இதற்குக் காரணம் சென்னை விமான நிலையம் - ஆலந்தூர்  -மடிப்பாக்கம் பகுதியில்  கூடிய மிகப் பெரிய அளவிலான மேகக் கூட்டம்தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

இந்த வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் இதுவரை பெரிய அளவிலான மழையை சென்னை எதிர்பார்க்கவில்லை.  ஆனால் இன்று காலை முதல் மழை விட்டு வெளுத்து வருகிறது. குறிப்பாக தென் சென்னை புறநகர்ப் பகுதிகளில் சூப்பராக மழை பெய்து வருகிறது.



இந்த திடீர் கன மழைக்கு காரணம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், மடிப்பாக்கம், விமான நிலையம், ஆலந்தூர் பகுதிகளில் திறண்ட மிகப் பெரிய மேகக் கூட்டம்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். மிகப் பெரிய அளவில் மேகக் கூட்டம் திரண்ட காரணத்தால்தான் பெருமழை இந்தப் பகுதியில் கொட்டித் தீர்த்து விட்டது. 

விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கிண்டி, நங்கநல்லூர், தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து விட்டு விட்டு மழை கொட்டிக் கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்