தென் சென்னையில் ஏன் திடீர்னு இவ்வளவு பெரிய மழை தெரியுமா

Nov 03, 2023,11:15 AM IST
சென்னை: சென்னை நகரில் காலையிலிருந்து திடீரென அதிக அளவில் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருப்பதால் மக்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர். 

இதற்குக் காரணம் சென்னை விமான நிலையம் - ஆலந்தூர்  -மடிப்பாக்கம் பகுதியில்  கூடிய மிகப் பெரிய அளவிலான மேகக் கூட்டம்தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

இந்த வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் இதுவரை பெரிய அளவிலான மழையை சென்னை எதிர்பார்க்கவில்லை.  ஆனால் இன்று காலை முதல் மழை விட்டு வெளுத்து வருகிறது. குறிப்பாக தென் சென்னை புறநகர்ப் பகுதிகளில் சூப்பராக மழை பெய்து வருகிறது.



இந்த திடீர் கன மழைக்கு காரணம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், மடிப்பாக்கம், விமான நிலையம், ஆலந்தூர் பகுதிகளில் திறண்ட மிகப் பெரிய மேகக் கூட்டம்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். மிகப் பெரிய அளவில் மேகக் கூட்டம் திரண்ட காரணத்தால்தான் பெருமழை இந்தப் பகுதியில் கொட்டித் தீர்த்து விட்டது. 

விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கிண்டி, நங்கநல்லூர், தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து விட்டு விட்டு மழை கொட்டிக் கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்