தென் சென்னையில் ஏன் திடீர்னு இவ்வளவு பெரிய மழை தெரியுமா

Nov 03, 2023,11:15 AM IST
சென்னை: சென்னை நகரில் காலையிலிருந்து திடீரென அதிக அளவில் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருப்பதால் மக்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர். 

இதற்குக் காரணம் சென்னை விமான நிலையம் - ஆலந்தூர்  -மடிப்பாக்கம் பகுதியில்  கூடிய மிகப் பெரிய அளவிலான மேகக் கூட்டம்தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

இந்த வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் இதுவரை பெரிய அளவிலான மழையை சென்னை எதிர்பார்க்கவில்லை.  ஆனால் இன்று காலை முதல் மழை விட்டு வெளுத்து வருகிறது. குறிப்பாக தென் சென்னை புறநகர்ப் பகுதிகளில் சூப்பராக மழை பெய்து வருகிறது.



இந்த திடீர் கன மழைக்கு காரணம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், மடிப்பாக்கம், விமான நிலையம், ஆலந்தூர் பகுதிகளில் திறண்ட மிகப் பெரிய மேகக் கூட்டம்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். மிகப் பெரிய அளவில் மேகக் கூட்டம் திரண்ட காரணத்தால்தான் பெருமழை இந்தப் பகுதியில் கொட்டித் தீர்த்து விட்டது. 

விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கிண்டி, நங்கநல்லூர், தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து விட்டு விட்டு மழை கொட்டிக் கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்