தென் மாவட்டங்களை மிரட்டும்.. அதீத கன மழை.. மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு ரெட்!

Dec 18, 2023,08:46 AM IST

- மஞ்சுளா தேவி


நெல்லை: நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் இன்று மதுரை, விருதுநகர், தேனி ,ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.


தென் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தென்மேற்கு வங்கக் கடலில்  கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று முதல் தென் மாவட்டங்களில் அதீத கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. 150 ஆண்டுகளில் இல்லாத அளவுகளில் கொட்டித் தீர்த்த கன மழையால் தாமிரபரணி ஆறு, மணிமுத்தாறு  உள்ளிட்ட அனைத்து ஆறுகளும் வெள்ளக்காடாகியுள்ளன. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகள் உள்ளிட்டவை நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டது.




நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் 1992 நவம்பர் மாதம் ஒரே நாளில் 96.5 செமீ மழை பெய்ததுதான் அதிகபட்ச மழை அளவாக இருந்தது. அதை தற்போது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நெருங்கி விட்டது.  நேற்று காலை 6:00 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அதிகபட்சமாக அங்கு 93 செமீ  அதாவது 930 மில்லி மீட்டர் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் காயல்பட்டினம் நீரில் மிதக்கிறது.


ரெட் அலர்ட்:


நெல்லை மாவட்டத்தை தொடர்ந்து  தற்போது மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இங்கும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.


ஆரஞ்சு அலர்ட்


தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மிதமான மழை:


இதுதவிர ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ,புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்