- மஞ்சுளா தேவி
நெல்லை: நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் இன்று மதுரை, விருதுநகர், தேனி ,ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
தென் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று முதல் தென் மாவட்டங்களில் அதீத கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. 150 ஆண்டுகளில் இல்லாத அளவுகளில் கொட்டித் தீர்த்த கன மழையால் தாமிரபரணி ஆறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளும் வெள்ளக்காடாகியுள்ளன. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகள் உள்ளிட்டவை நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் 1992 நவம்பர் மாதம் ஒரே நாளில் 96.5 செமீ மழை பெய்ததுதான் அதிகபட்ச மழை அளவாக இருந்தது. அதை தற்போது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நெருங்கி விட்டது. நேற்று காலை 6:00 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அதிகபட்சமாக அங்கு 93 செமீ அதாவது 930 மில்லி மீட்டர் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் காயல்பட்டினம் நீரில் மிதக்கிறது.
ரெட் அலர்ட்:
நெல்லை மாவட்டத்தை தொடர்ந்து தற்போது மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இங்கும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.
ஆரஞ்சு அலர்ட்
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிதமான மழை:
இதுதவிர ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ,புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}