- மஞ்சுளா தேவி
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அதிகபட்சமாக 17செமீ கனமழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி அந்தமான் கடல் பகுதிகளின் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியால், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது.
நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 17 செமீ மழை கொட்டி தீர்த்தது. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 12.3 செமீ மழையும், கடலூரில் 12 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
பரங்கிப்பேட்டையில் 12 செமீ மழையும், வேதாரண்யம் மற்றும் திருத்துறைப்ப்பூண்டியில் தலா 11.2 செமீ மழையும், கோடியக்கரையில் 10.3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
சிதம்பரத்தில் 10 செமீ மழையும், மயிலாடுதுறை, காட்டுமன்னார்கோவில், மதுராந்தகம், மற்றும் சீர்காழியில் தலா 9 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
7 இடகளில் மிக கன மழை.. 31 இடங்களில் கன மழை
இதுதொடர்பாக தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:
தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, 16ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட மேற்கு வங்கக் கடல், ஒடிஷா கடல் பகுதியில் நிலை பெறும். தற்போது தென் மேற்கு வங்கக் கடலில் மேலு்ம் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் 7 இடங்களில் மிக கன மழை பெய்துள்ளது. 31 இடங்களில் கன மழை பெய்துள்ளது.
அடுத்த 2 நாட்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன மழையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டனம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன அல்லது மிக கன மழை பெய்யும்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூ, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்றார்.
கடல் சீற்றம்
கடல் சீற்றம் காணப்பட்டதால் செங்கல்பட்டு, கல்பாக்கம் ,மாமல்லபுரம் ,போன்ற பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இப்பகுதிகளில் கடல் அலைகள் 5 அடி வரை மேலே எழுகின்றன. இதன் காரணமாக மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் பகுதிகளில் ஏராளமான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}