வேளாங்கண்ணியை வெளுத்தெடுத்த கன மழை.. 24 மணி நேரத்தில் 17 செ.மீ!

Nov 14, 2023,12:58 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அதிகபட்சமாக 17செமீ கனமழை பெய்துள்ளது.


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி அந்தமான் கடல் பகுதிகளின் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியால், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது.


நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 17 செமீ மழை கொட்டி தீர்த்தது. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 12.3 செமீ மழையும், கடலூரில் 12 செமீ மழையும் பதிவாகியுள்ளது.


பரங்கிப்பேட்டையில் 12 செமீ மழையும், வேதாரண்யம் மற்றும் திருத்துறைப்ப்பூண்டியில் தலா 11.2 செமீ மழையும், கோடியக்கரையில் 10.3  செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.




சிதம்பரத்தில் 10 செமீ மழையும், மயிலாடுதுறை, காட்டுமன்னார்கோவில், மதுராந்தகம், மற்றும் சீர்காழியில் தலா 9 செமீ மழையும் பதிவாகியுள்ளது.


7 இடகளில் மிக கன மழை.. 31 இடங்களில் கன மழை


இதுதொடர்பாக தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:


தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, 16ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட மேற்கு வங்கக் கடல், ஒடிஷா கடல் பகுதியில் நிலை பெறும். தற்போது தென் மேற்கு வங்கக் கடலில் மேலு்ம் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.


தமிழ்நாட்டில் 7 இடங்களில் மிக கன மழை பெய்துள்ளது. 31 இடங்களில் கன மழை பெய்துள்ளது.


அடுத்த 2 நாட்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


கன மழையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி  நேரத்தில் நாகப்பட்டனம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன அல்லது மிக கன மழை பெய்யும்.


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூ, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்றார்.


கடல் சீற்றம்


கடல் சீற்றம் காணப்பட்டதால் செங்கல்பட்டு, கல்பாக்கம் ,மாமல்லபுரம் ,போன்ற பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இப்பகுதிகளில் கடல் அலைகள் 5 அடி வரை  மேலே எழுகின்றன. இதன் காரணமாக மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் பகுதிகளில் ஏராளமான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்