மதுரை: மதுரையில் இன்று மதியம் முதல் நல்ல மழை கொட்டித் தீர்த்து விட்டது. காலையில் இருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பின்னர் மழை வெளுத்து வாங்கியது.
மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும் அவ்வப்பொழுது மழை பெய்து வருகின்றது. அதாவது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தற்பொழுது நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில பகுதிகளில் மிதமான மழை மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தாலும் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் மிதமான மற்றும் கனமழை பெய்து வந்தது. மின்னல், இடி மற்றும் மேக மூட்டத்துடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மதியம் முதல் மலை வெளுத்து வாங்கி விட்டது. இதனால் பல இடங்களில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது, சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மாலையில் பள்ளி விட்டு வீட்டிற்கு வரும் குழந்தைகள் மிகவும் சிரமத்தை சந்தித்தனர். இந்த திடீர் மழை பொது மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியதுடன் போக்கு வரத்து நெரிசலையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பக்கம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப் பெருக்காக உள்ளது, மறுபக்கம் ஊருக்குள் மழை விட்டு வெளுத்ததால் மதுரை மாநகரமே குளிர்ந்து போய்க் கிடக்கிறது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}