மதுரை: மதுரையில் இன்று மதியம் முதல் நல்ல மழை கொட்டித் தீர்த்து விட்டது. காலையில் இருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பின்னர் மழை வெளுத்து வாங்கியது.
மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும் அவ்வப்பொழுது மழை பெய்து வருகின்றது. அதாவது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தற்பொழுது நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில பகுதிகளில் மிதமான மழை மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தாலும் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் மிதமான மற்றும் கனமழை பெய்து வந்தது. மின்னல், இடி மற்றும் மேக மூட்டத்துடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மதியம் முதல் மலை வெளுத்து வாங்கி விட்டது. இதனால் பல இடங்களில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது, சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மாலையில் பள்ளி விட்டு வீட்டிற்கு வரும் குழந்தைகள் மிகவும் சிரமத்தை சந்தித்தனர். இந்த திடீர் மழை பொது மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியதுடன் போக்கு வரத்து நெரிசலையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பக்கம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப் பெருக்காக உள்ளது, மறுபக்கம் ஊருக்குள் மழை விட்டு வெளுத்ததால் மதுரை மாநகரமே குளிர்ந்து போய்க் கிடக்கிறது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}