சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வட மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்று தெரிகிறது. இன்று இரவு பல மாவட்டங்களில் ஓரளவுக்கு கன மழை இருக்கக் கூடும். அதேசமயம் நாளையும் நாளை மறு நாளும் வட மாவட்டங்களில் மிக கன மழையை எதிர்பார்க்கலாம்.
நாளை இரவு முதல் 4ம் தேதி வரை இரு வட மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிக கன மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3ம் தேதி மழை
மிக கன மழை வாய்ப்பு - திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் மாவட்டங்கள். இந்த மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.
கன மழை - வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்டங்கள்.
4ம் தேதி மழை
மிக கன மழை - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு திருவண்ணாமலை மாவட்டங்கள்
கன மழை - புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்.
இதற்கிடையே, இன்று இரவு 1 மணிக்குள் 16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}