சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வட மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்று தெரிகிறது. இன்று இரவு பல மாவட்டங்களில் ஓரளவுக்கு கன மழை இருக்கக் கூடும். அதேசமயம் நாளையும் நாளை மறு நாளும் வட மாவட்டங்களில் மிக கன மழையை எதிர்பார்க்கலாம்.
நாளை இரவு முதல் 4ம் தேதி வரை இரு வட மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிக கன மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3ம் தேதி மழை
மிக கன மழை வாய்ப்பு - திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் மாவட்டங்கள். இந்த மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.
கன மழை - வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்டங்கள்.
4ம் தேதி மழை
மிக கன மழை - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு திருவண்ணாமலை மாவட்டங்கள்
கன மழை - புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்.
இதற்கிடையே, இன்று இரவு 1 மணிக்குள் 16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}