சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வட மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்று தெரிகிறது. இன்று இரவு பல மாவட்டங்களில் ஓரளவுக்கு கன மழை இருக்கக் கூடும். அதேசமயம் நாளையும் நாளை மறு நாளும் வட மாவட்டங்களில் மிக கன மழையை எதிர்பார்க்கலாம்.
நாளை இரவு முதல் 4ம் தேதி வரை இரு வட மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிக கன மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3ம் தேதி மழை
மிக கன மழை வாய்ப்பு - திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் மாவட்டங்கள். இந்த மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.
கன மழை - வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்டங்கள்.
4ம் தேதி மழை
மிக கன மழை - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு திருவண்ணாமலை மாவட்டங்கள்
கன மழை - புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்.
இதற்கிடையே, இன்று இரவு 1 மணிக்குள் 16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}