சென்னை: தங்களுடைய பிரச்சனை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என்று ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நடிகர் ரவி மோகன் -ஆர்த்தக்கு இடையில் விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த சூழலில், ரவி மோகன் பாடகி கெனிஷா இருவரும் ஒரு திருமண நிழ்வில் ஜோடிாக கலந்து கொணடனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனால், ரவி மோகன் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக ரவி மோகனும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இப்படி கணவன் மனைவி இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ஆர்த்தியின் தாயாரும் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
இந்த அறிக்கைகளை வைத்து சமூக வலைத்தள பக்கங்களில் விவாதங்கள் நடந்து வந்தன. பலரும் பலவிதங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி ரவி மற்றும் அவரது தாயாருக்கு தடை விதிக்கக்கோரி நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு இன்று விசாரனைக்கு வந்த போது, இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், தங்களுக்கு இடையிலான பிரச்சனை குறித்து பொது வெளியில் அவதூறு கருத்துகளை வெளியிட நடிகர் ரவி மோகனுக்கும் ஆர்த்தி ரவிக்கும் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இவர்கள் குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக ஊடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}