பொதுவெளிகளில் அறிக்கை வெளியிட.. நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்திக்கு ஹைகோர்ட் தடை

May 23, 2025,05:07 PM IST

சென்னை: தங்களுடைய பிரச்சனை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என்று ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


நடிகர் ரவி மோகன் -ஆர்த்தக்கு இடையில் விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த சூழலில், ரவி மோகன் பாடகி கெனிஷா இருவரும் ஒரு திருமண நிழ்வில் ஜோடிாக கலந்து கொணடனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.


இதனால், ரவி மோகன் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக ரவி மோகனும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இப்படி கணவன் மனைவி இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ஆர்த்தியின் தாயாரும் ஒரு அறிக்கை வெளியிட்டார்.




இந்த அறிக்கைகளை வைத்து சமூக வலைத்தள பக்கங்களில் விவாதங்கள் நடந்து வந்தன. பலரும் பலவிதங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி ரவி மற்றும் அவரது தாயாருக்கு தடை விதிக்கக்கோரி நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


இவ்வழக்கு இன்று விசாரனைக்கு வந்த போது, இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், தங்களுக்கு இடையிலான பிரச்சனை குறித்து பொது வெளியில் அவதூறு கருத்துகளை வெளியிட நடிகர் ரவி மோகனுக்கும் ஆர்த்தி ரவிக்கும் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இவர்கள் குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக ஊடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

news

குடவோலை முறை.. உலகத்துக்கே வழிகாட்டிய உத்திரமேரூர் தேர்தல் நடைமுறை!

news

Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்

news

இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!

news

பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்