சென்னை: தங்களுடைய பிரச்சனை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என்று ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நடிகர் ரவி மோகன் -ஆர்த்தக்கு இடையில் விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த சூழலில், ரவி மோகன் பாடகி கெனிஷா இருவரும் ஒரு திருமண நிழ்வில் ஜோடிாக கலந்து கொணடனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனால், ரவி மோகன் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக ரவி மோகனும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இப்படி கணவன் மனைவி இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ஆர்த்தியின் தாயாரும் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
இந்த அறிக்கைகளை வைத்து சமூக வலைத்தள பக்கங்களில் விவாதங்கள் நடந்து வந்தன. பலரும் பலவிதங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி ரவி மற்றும் அவரது தாயாருக்கு தடை விதிக்கக்கோரி நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு இன்று விசாரனைக்கு வந்த போது, இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், தங்களுக்கு இடையிலான பிரச்சனை குறித்து பொது வெளியில் அவதூறு கருத்துகளை வெளியிட நடிகர் ரவி மோகனுக்கும் ஆர்த்தி ரவிக்கும் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இவர்கள் குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக ஊடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
25, 26 தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம்..!
இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும்.. அடுத்த 10 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்..!
பொதுவெளிகளில் அறிக்கை வெளியிட.. நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்திக்கு ஹைகோர்ட் தடை
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய நிபந்தனைகளை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
கோடை விடுமுறைக்கு பின்னர்... திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறப்பு!
அரபிக் கடலில்.. வலுப்பெற்றது.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் தகவல்!
வங்கதேசத்தில் மீண்டும் அரசியல் குழப்பம்...பதவி விலகுகிறார் முகமது யூனுஸ்
2026 இல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை!
{{comments.comment}}