ஹிஜாப் அணிந்து வந்த அரபி டீச்சர்.. இந்தி தேர்வு எழுத அனுமதி மறுப்பு!

Aug 20, 2023,01:44 PM IST
திருவண்ணாமலை: ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுத வந்த அரபி டீச்சரை ஹிஜாப் அணிய கூடாது என்று கூறி வெளியே அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று  மத்யமா இந்தி தேர்வு நடைபெற்றது. தென்னிந்திய இந்தி பிரச்சார சபை நடத்தும் தேர்வு இது. இதில் காலை முதல் தாள் தேர்வு நடைபெற்றது. பிற்பகலில் 2வது தாள் பரீட்சை நடைபெற்றது.



இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் எழுதினர். அந்த வகையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஷபானா என்ற அரபி டீச்சரும் தேர்வு எழுத தனக்கு ஒதுக்கப்பட்ட, கோமாசிபட்டியில் உள்ள அண்ணாமலையார் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்திற்கு வந்தார். தேர்வு அறைக்குள் அவரை அனுமதித்த தேர்வு அதிகாரிகள், தேர்வு ஆரம்பித்த 10 நிமிடத்தில் அவரிடம் வந்து அவர் அணிந்திருந்த ஹிஜாபை அகற்றக் கூறியுள்ளனர்.

அதற்கு ஷபானா, இது எனது மத அடையாளம். இதை எப்படி அகற்ற முடியும் என்று கேட்டதாக தெரிகிறது. ஆனால் ஹிபாபுடன் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று கண்டிப்பாக  கூறிய அதிகாரகிள், ஷபாஆவை தேர்வறையிலிருந்து வெளியேற்றியுள்ளனர். இதனால் ஷபானா அதிர்ச்சி அடைந்தார். அவருடன் தேர்வு வளாகத்திற்கு வந்திருந்த அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விவகாரம் குறித்துத் தகவல் கிடைத்ததும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேர்வு மையத்திற்குத் திரண்டு வந்து தேர்வு மையத்திற்கு முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்