ஹிஜாப் அணிந்து வந்த அரபி டீச்சர்.. இந்தி தேர்வு எழுத அனுமதி மறுப்பு!

Aug 20, 2023,01:44 PM IST
திருவண்ணாமலை: ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுத வந்த அரபி டீச்சரை ஹிஜாப் அணிய கூடாது என்று கூறி வெளியே அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று  மத்யமா இந்தி தேர்வு நடைபெற்றது. தென்னிந்திய இந்தி பிரச்சார சபை நடத்தும் தேர்வு இது. இதில் காலை முதல் தாள் தேர்வு நடைபெற்றது. பிற்பகலில் 2வது தாள் பரீட்சை நடைபெற்றது.



இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் எழுதினர். அந்த வகையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஷபானா என்ற அரபி டீச்சரும் தேர்வு எழுத தனக்கு ஒதுக்கப்பட்ட, கோமாசிபட்டியில் உள்ள அண்ணாமலையார் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்திற்கு வந்தார். தேர்வு அறைக்குள் அவரை அனுமதித்த தேர்வு அதிகாரிகள், தேர்வு ஆரம்பித்த 10 நிமிடத்தில் அவரிடம் வந்து அவர் அணிந்திருந்த ஹிஜாபை அகற்றக் கூறியுள்ளனர்.

அதற்கு ஷபானா, இது எனது மத அடையாளம். இதை எப்படி அகற்ற முடியும் என்று கேட்டதாக தெரிகிறது. ஆனால் ஹிபாபுடன் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று கண்டிப்பாக  கூறிய அதிகாரகிள், ஷபாஆவை தேர்வறையிலிருந்து வெளியேற்றியுள்ளனர். இதனால் ஷபானா அதிர்ச்சி அடைந்தார். அவருடன் தேர்வு வளாகத்திற்கு வந்திருந்த அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விவகாரம் குறித்துத் தகவல் கிடைத்ததும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேர்வு மையத்திற்குத் திரண்டு வந்து தேர்வு மையத்திற்கு முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்