ஹிஜாப் அணிந்து வந்த அரபி டீச்சர்.. இந்தி தேர்வு எழுத அனுமதி மறுப்பு!

Aug 20, 2023,01:44 PM IST
திருவண்ணாமலை: ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுத வந்த அரபி டீச்சரை ஹிஜாப் அணிய கூடாது என்று கூறி வெளியே அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று  மத்யமா இந்தி தேர்வு நடைபெற்றது. தென்னிந்திய இந்தி பிரச்சார சபை நடத்தும் தேர்வு இது. இதில் காலை முதல் தாள் தேர்வு நடைபெற்றது. பிற்பகலில் 2வது தாள் பரீட்சை நடைபெற்றது.



இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் எழுதினர். அந்த வகையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஷபானா என்ற அரபி டீச்சரும் தேர்வு எழுத தனக்கு ஒதுக்கப்பட்ட, கோமாசிபட்டியில் உள்ள அண்ணாமலையார் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்திற்கு வந்தார். தேர்வு அறைக்குள் அவரை அனுமதித்த தேர்வு அதிகாரிகள், தேர்வு ஆரம்பித்த 10 நிமிடத்தில் அவரிடம் வந்து அவர் அணிந்திருந்த ஹிஜாபை அகற்றக் கூறியுள்ளனர்.

அதற்கு ஷபானா, இது எனது மத அடையாளம். இதை எப்படி அகற்ற முடியும் என்று கேட்டதாக தெரிகிறது. ஆனால் ஹிபாபுடன் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று கண்டிப்பாக  கூறிய அதிகாரகிள், ஷபாஆவை தேர்வறையிலிருந்து வெளியேற்றியுள்ளனர். இதனால் ஷபானா அதிர்ச்சி அடைந்தார். அவருடன் தேர்வு வளாகத்திற்கு வந்திருந்த அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விவகாரம் குறித்துத் தகவல் கிடைத்ததும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேர்வு மையத்திற்குத் திரண்டு வந்து தேர்வு மையத்திற்கு முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்