வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

Sep 19, 2024,03:12 PM IST

சென்னை:   இந்தியா வங்கதேசம் இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியுள்ள நிலையில், இந்த போட்டித் தொடரை எதிர்த்து  இந்து மக்கள் கட்சி இன்று போராட்டம் நடத்தியது.


இந்தியா வங்கதேசம் இடையே இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. வங்கதேசம் கிரிக்கெட் அணி வீரர்கள் நஜ்முல் ஹுசைன் ஹன்டோ தலைமையில் வந்துள்ளனர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று (19ஆம் தேதி) காலை 9:30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாடுகிறது. 




ஆனால் இந்த கிரிக்கெட் தொடரை நடத்த இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வங்கதேசத்தில் பெரும் கலவரம் வெடித்தது. அந்த நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் நிலையும் ஏற்பட்டது. மேலும் அங்கு நடந்த கலவரத்தில் இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் வங்கதேச அணி இந்தியாவுக்கு வரக் கூடாது, இந்தத் தொடரை தடை செய்ய வேண்டும். மீறி விளையாடினால் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மகா சபை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் எச்சரித்துள்ளன.


சென்னையில் இந்து அமைப்புகள் பலமானவையாக இல்லை என்பதால் பிரச்சினை இல்லை. இருப்பினும் இந்து மக்கள் கட்சி சார்பில் சிலர் இன்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தினர். ஆனால் வட மாநிலங்களில் இந்தத் தொடர் தொடரும்போது அங்கு பெருமளவில் போராட்டங்கள் வெடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்