சென்னை: இந்தியா வங்கதேசம் இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியுள்ள நிலையில், இந்த போட்டித் தொடரை எதிர்த்து இந்து மக்கள் கட்சி இன்று போராட்டம் நடத்தியது.
இந்தியா வங்கதேசம் இடையே இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. வங்கதேசம் கிரிக்கெட் அணி வீரர்கள் நஜ்முல் ஹுசைன் ஹன்டோ தலைமையில் வந்துள்ளனர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று (19ஆம் தேதி) காலை 9:30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாடுகிறது.

ஆனால் இந்த கிரிக்கெட் தொடரை நடத்த இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வங்கதேசத்தில் பெரும் கலவரம் வெடித்தது. அந்த நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் நிலையும் ஏற்பட்டது. மேலும் அங்கு நடந்த கலவரத்தில் இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் வங்கதேச அணி இந்தியாவுக்கு வரக் கூடாது, இந்தத் தொடரை தடை செய்ய வேண்டும். மீறி விளையாடினால் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மகா சபை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் எச்சரித்துள்ளன.
சென்னையில் இந்து அமைப்புகள் பலமானவையாக இல்லை என்பதால் பிரச்சினை இல்லை. இருப்பினும் இந்து மக்கள் கட்சி சார்பில் சிலர் இன்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தினர். ஆனால் வட மாநிலங்களில் இந்தத் தொடர் தொடரும்போது அங்கு பெருமளவில் போராட்டங்கள் வெடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
3 உதயசூரியன்.. ஒரு தனிச் சின்னம்.. ஆக மொத்தம் மதிமுகவுக்கு 4 சீட்.. 2 தொகுதிகள் குறைவு!
ஐபிஎல் 2026: முதல் கட்ட அட்டவணை வெளியீடு.. பெங்களூருவில் தொடக்க ஆட்டம்.. சென்னைக்கு எப்போ?
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
{{comments.comment}}