ஆளெடுப்பும் குறைந்தது.. வேலையை விட்டுப் போவதும் குறைஞ்சிருச்சு!

Apr 18, 2023,11:19 AM IST
டெல்லி: வேலைக்கு ஆளெடுப்பதை பல்வேறு நிறுவனங்கள் குறைத்துக் கொண்டுள்ளதால், இருக்கிற  வேலையை விட்டு போவோரின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறதாம்.

இந்தியாவில் ஜனவரி - மார்ச் மாத காலகட்டத்தில் வேலைக்கு ஆள் எடுப்பது 53 சதவீத அளவு என்ற நிலையில் இருந்தது.  இதுவே அதற்கு முந்தைய அக்டோபர் 2022 -  டிசம்பர் மாத காலகட்டத்தில் 64 சதவீத அளவுக்கு இருந்தது.

ஐடி துறையில் தற்போது ஒரு விதமான நிலையற்ற தன்மை காணப்படுகிறது. பிற துறைகளிலும் கூட இதே நிலைதான். இதனால் வேலைக்கு ஆள் எடுப்பதை பெரிய பெரிய நிறுவனங்கள் குறைத்துக் கொண்டுள்ளன. மிகவும் எச்சரிக்கையுடன் இந்த விவகாரத்தில் நடக்க அவை தீர்மானித்துள்ளன. ஹெல்த்கேர் உள்ளிட்ட சில துறைகளில் ஆளெடுப்பு அதிகம் உள்ளது. ஆனால் பெரும்பாலான துறைகளில் அது குறைந்து விட்டதாக இன்டீட் இன்தியா என்ற நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவர் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.




வேலைக்கு ஆள் எடுப்போர் குறைந்துவிட்டதால் வேலை தேடுவோரும் குறையத் தொடங்கியுள்ளனர். தற்போதைய வேலையிலேயே தொடர பலரும் முடிவெடுத்துள்ளனர். புதியவேலைக்கான தேடல் இருந்தாலும் கூட வேலையை விடுவது குறைந்துள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையில்தான் வேலைக்கு ஆள் எடுப்பது அதிகமாக உள்ளது. அதாவது 71 சதவீதமாக இது உள்ளது. இதற்கு அடுத்து ஹெல்த்கேர் (64%). 3வது இடத்தில் ரியல் எஸ்டேட் 57 சதவீத ஆளெடுப்புடன் உள்ளது.

அதேசமயம், மீடியா துறையில் ஆளெடுப்பது 49 சதவீதமாக இறங்கி விட்டது. ஐடி துறை இன்னும் மோசம். வெறும் 29 சதவீத அளவுக்கே ஆளெடுப்பு நடக்கிறது. உற்பத்திப் பிரிவு 39 சதவீதமாக உள்ளது. புதிதாக வேலையில் சேர விரும்புவோர் பலரும் அலுவலகம் வந்து வேலை பார்க்க விரும்புவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  அதாவது 57 சதவீதம் பேர் அலுவலகம் வர விரும்புகிறார்களாம்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்