எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமியை சீரழித்த கொடூரன்.. காப்பக உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

Jul 26, 2025,03:25 PM IST

லத்தூர், மகாராஷ்டிரா: எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமியை கடந்த 2 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமான அந்த சிறுமிக்கு கட்டாயப்படுத்தி கருவைக் கலைத்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேவாலயா என்ற அந்த காப்பகத்தின் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் சேவாலயா என்ற காப்பகம் உள்ளது. இங்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட சிறார்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் 16 வயதான சிறுமிக்கு மிகப் பெரிய கொடுமை அரங்கேறியுள்ளது.

காப்பகத்தில், தன்னை இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் போலீஸில் புகார் அளித்துள்ளார்.




அந்தப் புகாரில், ஜூலை 13, 2023 முதல் இந்த ஆண்டு ஜூலை 23 வரை ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சேவாலயா காப்பகத்தில் தன்னை ஒரு ஊழியர் நான்கு முறை பாலியல் பலாத்காரம் செய்தார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.


இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் இறுதியில் தற்போது சேவாலயா காப்பகத்தின் நிறுவனர் ரவி பாபட்டே, கண்காணிப்பாளர் ரச்னா பாபட்டே, மற்றும் ஊழியர்கள் அமித் மகாமூனி, பூஜா வாக்மரே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சம்பந்தப்பட்ட காப்பகமானது எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்காக செயல்படும் காப்பகம். அந்த காப்பகத்தில் தற்போது 23 சிறுவர்களும் 7 சிறுமிகளும் தங்கியுள்ளனர். இப்படிப்பட்ட மையத்தில் இப்படி ஒரு கொடுமை நடந்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்