எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமியை சீரழித்த கொடூரன்.. காப்பக உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

Jul 26, 2025,03:25 PM IST

லத்தூர், மகாராஷ்டிரா: எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமியை கடந்த 2 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமான அந்த சிறுமிக்கு கட்டாயப்படுத்தி கருவைக் கலைத்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேவாலயா என்ற அந்த காப்பகத்தின் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் சேவாலயா என்ற காப்பகம் உள்ளது. இங்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட சிறார்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் 16 வயதான சிறுமிக்கு மிகப் பெரிய கொடுமை அரங்கேறியுள்ளது.

காப்பகத்தில், தன்னை இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் போலீஸில் புகார் அளித்துள்ளார்.




அந்தப் புகாரில், ஜூலை 13, 2023 முதல் இந்த ஆண்டு ஜூலை 23 வரை ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சேவாலயா காப்பகத்தில் தன்னை ஒரு ஊழியர் நான்கு முறை பாலியல் பலாத்காரம் செய்தார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.


இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் இறுதியில் தற்போது சேவாலயா காப்பகத்தின் நிறுவனர் ரவி பாபட்டே, கண்காணிப்பாளர் ரச்னா பாபட்டே, மற்றும் ஊழியர்கள் அமித் மகாமூனி, பூஜா வாக்மரே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சம்பந்தப்பட்ட காப்பகமானது எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்காக செயல்படும் காப்பகம். அந்த காப்பகத்தில் தற்போது 23 சிறுவர்களும் 7 சிறுமிகளும் தங்கியுள்ளனர். இப்படிப்பட்ட மையத்தில் இப்படி ஒரு கொடுமை நடந்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்