எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமியை சீரழித்த கொடூரன்.. காப்பக உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

Jul 26, 2025,03:25 PM IST

லத்தூர், மகாராஷ்டிரா: எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமியை கடந்த 2 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமான அந்த சிறுமிக்கு கட்டாயப்படுத்தி கருவைக் கலைத்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேவாலயா என்ற அந்த காப்பகத்தின் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் சேவாலயா என்ற காப்பகம் உள்ளது. இங்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட சிறார்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் 16 வயதான சிறுமிக்கு மிகப் பெரிய கொடுமை அரங்கேறியுள்ளது.

காப்பகத்தில், தன்னை இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் போலீஸில் புகார் அளித்துள்ளார்.




அந்தப் புகாரில், ஜூலை 13, 2023 முதல் இந்த ஆண்டு ஜூலை 23 வரை ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சேவாலயா காப்பகத்தில் தன்னை ஒரு ஊழியர் நான்கு முறை பாலியல் பலாத்காரம் செய்தார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.


இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் இறுதியில் தற்போது சேவாலயா காப்பகத்தின் நிறுவனர் ரவி பாபட்டே, கண்காணிப்பாளர் ரச்னா பாபட்டே, மற்றும் ஊழியர்கள் அமித் மகாமூனி, பூஜா வாக்மரே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சம்பந்தப்பட்ட காப்பகமானது எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்காக செயல்படும் காப்பகம். அந்த காப்பகத்தில் தற்போது 23 சிறுவர்களும் 7 சிறுமிகளும் தங்கியுள்ளனர். இப்படிப்பட்ட மையத்தில் இப்படி ஒரு கொடுமை நடந்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?

news

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்

news

சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!

news

சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ

அதிகம் பார்க்கும் செய்திகள்