மதுரை: மதுரையில் மருதுபாண்டியர் நினைவு தினம், தேவர் ஜெயந்தி விழா ஆகியவற்றை முன்னிட்டு அக்.27, 29, 30 ஆகிய 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சுதந்திர போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் குருபூஜை நடைபெறவுள்ளது. அதேபோல ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் ஆயிரக்கணக்கானோர் இவர்களது நினைவிடத்திற்கு வருகை தந்து மரியாதை செலுத்துவார்கள்.
இந்த நிகழ்ச்சியில், முக்கிய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமுதாய அமைப்பினர்கள், பொதுமக்கள் என அதிகளவில் கலந்து கொள்ள உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறையினரால் பலப்படுத்தப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்வாகும்.
அதேபோல மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதும் வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரையில் வரும் அக்டோபர் 27, 29, 30 ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
இவை தவிர, மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்டவைகளும் 3 நாட்கள் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}