டில்லி : 2024 ம் ஆண்டில் வீட்டு கடனுக்கான இஎம்ஐ வட்டி விகிதம் 0.5 முதல் 1.25 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது நடுத்தர மக்களை பெரிதும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி 2022ம் ஆண்டு மே மாதம் முதல், 2023 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ரெபோ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால் மத்திய வங்கியும் வட்டி விகிதத்தை 2.5 சதவீதம் உயர்த்துள்ளது. உலக அளவில் பணவீக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பின் எதிரொலியாக இந்த வட்டி விகித உயர்வு நடைபெற்றது. இதனால் வங்கிகளும் வீட்டு கடன் உள்ளிட்டவற்றிற்கான வட்டியை உயர்த்தியது.
தற்போது பணவீக்கத்தின் நிலை சீரடைந்துள்ளது உலக அளவில் நல்ல விஷயமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ரெபோ வட்டி விகிதத்தை ஆர்பிஐ குறைக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் பலரும் கணித்துள்ளனர்.
2024ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டான ஜூன் அல்லது ஜூலை மாதம் மிக முக்கியமானது. இந்த மாதங்களில் வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவை ஆர்பிஐ எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகப்படியான வட்டி விகிதம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய ஆபத்தான நிலையை ஏற்படுத்தும். இதனால் வட்டி விகித குறைப்பு பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்க உதவும் என்பதால் வட்டி விகிதத்தை ஆர்பிஐ குறைக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
2024 ம் ஆண்டின் முதல் அரையாண்டில் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படலாம். இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு இஎம்ஐ சுமை குறையும். இதனால் வீடு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. வட்டி விகிதம் குறைக்கப்படும் போது முதலீடுகள் அதிகரிப்பது வழக்கம் என்பதால் ரெபோ வட்டி விகிதத்தை குறைப்பது பற்றி ஆர்பிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}