சென்னை: மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா ஏப்ரல் 4 மற்றும் 5ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு வருகிறார்.
லோக்சபா தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சி சார்ந்த தலைவர்கள், கூட்டணிக் கட்சிகள் என மாநிலம் முழுவதும் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் தமிழக முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அப்போது பாஜக மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள கட்சித் தலைவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
வரும் ஏப்ரல் நான்காம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மறுநாள் அதாவது ஏப்ரல் ஐந்தாம் தேதி சென்னையிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார் என பாஜக தெரிவித்துள்ளது.
இவருடன் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பல கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வந்து பிரச்சாரம் செய்து பேசி விட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}