டில்லி : குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து கெஜட் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. இதில் ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடரின் முதல் நாளே அலுவல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை, ஜெக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மருத்துவ காரணங்களால் உடல்நிலையை கருத்தில் கொண்டு பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த திடீர் ராஜினாமா அறிவிப்பு பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியது. பகல் 1 மணி முதல் மாலை 5 மணிக்குள் என்ன நடந்தது? துணை ஜனாதிபதி பதவியை ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்ய என்ன காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை எழுப்பி, கேள்வி கேட்டு வந்தன. அதோடு ஜெக்தீப் தன்கர் தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன.
இன்றைய பார்லிமென்ட் கூட்டத் தொடர் துவங்கியதும், ராஜ்யபா துணை தலைவர் ஹரிவன்ஷ் சிங், அவைக்கு தலைமை ஏற்று நடத்தினார். ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பி, இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் பார்லிமென்ட் இரு அவைகளிலும் சலசலப்பு நிலவியது.
இதற்கிடையில் ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா கடிதம், குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டதாக அவையில் ஹரிவன்ஷ் அறிவித்தார். தொடர்ந்து அவையில் அமளி நீடித்ததால் பார்லிமென்ட் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}