டில்லி : குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து கெஜட் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. இதில் ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடரின் முதல் நாளே அலுவல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை, ஜெக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மருத்துவ காரணங்களால் உடல்நிலையை கருத்தில் கொண்டு பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த திடீர் ராஜினாமா அறிவிப்பு பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியது. பகல் 1 மணி முதல் மாலை 5 மணிக்குள் என்ன நடந்தது? துணை ஜனாதிபதி பதவியை ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்ய என்ன காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை எழுப்பி, கேள்வி கேட்டு வந்தன. அதோடு ஜெக்தீப் தன்கர் தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன.
இன்றைய பார்லிமென்ட் கூட்டத் தொடர் துவங்கியதும், ராஜ்யபா துணை தலைவர் ஹரிவன்ஷ் சிங், அவைக்கு தலைமை ஏற்று நடத்தினார். ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பி, இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் பார்லிமென்ட் இரு அவைகளிலும் சலசலப்பு நிலவியது.
இதற்கிடையில் ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா கடிதம், குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டதாக அவையில் ஹரிவன்ஷ் அறிவித்தார். தொடர்ந்து அவையில் அமளி நீடித்ததால் பார்லிமென்ட் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!
Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை
திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!
அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?
சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக.,விற்கு கை கொடுக்குமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 10, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும்
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
{{comments.comment}}