Operation Sindoor: பொற்கோவிலை தாக்கும் பாகிஸ்தான் திட்டத்தை.. இந்தியா முறியத்தது எப்படி?

May 19, 2025,07:11 PM IST

டெல்லி: இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானின் பெரும் சதித் திட்டத்தை முறியடித்துள்ளது. அதாவது அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலை தகர்க்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதைத்தான் இந்தியா முறியடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


மே மாதத்தின் தொடக்கத்தில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான்கு இரவுகள் கடுமையான மோதல் நிலவியது. அப்போது, அமிர்தசரஸ் உட்பட பல எல்லை நகரங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டன. பாகிஸ்தானின் ஒவ்வொரு drone மற்றும் missile தாக்குதலையும் முறியடித்த இந்தியாவின் Air Defence system செயல்பாடு குறித்த demo ஒன்றை இந்திய ராணுவம் தற்போது பகிர்ந்துள்ளது. 


AKASH missile system மற்றும் L-70 Air Defence Guns போன்ற Air Defence systemகள், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலையும், பஞ்சாபின் பிற நகரங்களையும் பாகிஸ்தானின் missile மற்றும் drone தாக்குதல்களில் இருந்து காப்பாற்றின.  இதனால் கோபமடைந்த பாகிஸ்தான், LoC மற்றும் சர்வதேச எல்லைகளில் (IB) பீரங்கி மற்றும் shell தாக்குதல்களை நடத்தியது. இதன் மூலம் இந்திய ராணுவத்தை சீண்டியது. 




இந்திய ராணுவம் பாகிஸ்தானின் திட்டத்தை எப்படி முறியடித்தது என்பது குறித்த ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது. 15வது காலாட்படை பிரிவின் GOC மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி, ராணுவம் இந்த ஆபரேஷனை எவ்வாறு செயல்படுத்தியது என்பதை விளக்கினார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் துல்லியமான ஆயுதங்களைக் கொண்டு தீவிரவாதிகள் இருக்கும் இடங்களை மட்டுமே குறிவைத்து தாக்கினோம். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொண்டோம். இந்த உண்மையை பாகிஸ்தான் ராணுவமே ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியாவில் தாக்குவதற்கு எந்த இலக்கும் இல்லை. இந்திய ராணுவத்தை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியமோ, திறனோ அவர்களுக்கு இல்லை. அதனால், அவர்கள் தீவிரவாதத்தை ஒரு தேசிய கொள்கையாக பயன்படுத்துகிறார்கள். மேலும், தங்கள் சொந்த மண்ணிலிருந்து ஆளில்லா விமானங்களை ஏவுகிறார்கள் என்றார் அவர்.


தொடர்ந்து அவர் பேசுகையில், அவர்கள் மத வழிபாட்டு தலங்களையும் குறிவைத்து தாக்கினர். குறிப்பாக அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இது உலகளவில் அறியப்பட்ட ஒரு புனித ஸ்தலம். இங்கு பல drone மற்றும் missile தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால், நமது ராணுவம், விமானப் படையினர் அவற்றை தைரியமாக தடுத்து நிறுத்தினர். இந்திய ராணுவமும், Air Defence படையினரும் அவர்களின் அனைத்து திட்டங்களையும் முறியடித்து, அனைத்து விதமான வான்வழி அச்சுறுத்தல்களையும்  தடுத்தார்கள் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்