பாகிஸ்தானில் விருந்து.. உளவாளியுடன் பாலிக்கு ஜாலி டூர்.. தேச துரோகத்தில் ஈடுபட்டு சிக்கிய ஜோதி ராணி!

May 18, 2025,02:15 PM IST

டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களை பாகிஸ்தான் ராணுவத்துக்கு அளித்து தே துரோக செயலில் ஈடுபட்டதாக கைதாகியுள்ள யூடியூபர் ஜோதி ராணி என்கிற ஜோதி மல்ஹோத்ரா குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜோதி மல்ஹோத்ரா என்ற ஜோதி ராணி சனிக்கிழமையன்று பாகிஸ்தானுக்காக வேவு பார்த்த குற்றச்சாட்டுக்காகவும், முக்கியமான இந்திய இராணுவத் தகவல்களை கசியவிட்டதாகவும் கைது செய்யப்பட்டார். 33 வயதான இவர் உள்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்




யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?


ஜோதி மல்ஹோத்ரா ஹரியானாவைச் சேர்ந்த ஒரு டிராவல் யூடியூபர்.  ஜோவுடன் ஒரு பயணம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கமான 'travelwithjo1'-க்கு 1.37 லட்சம் பாலோயர்கள் உள்ளனர். அவரது இன்ஸ்டாகிராம்  பயோவில், நாடோடி சிம்ம ராசிப் பெண். சுற்றித் திரிபவர். பழைய சிந்தனைகள் கொண்ட நவீன ஹரியானா மற்றும் பஞ்சாபிப் பெண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அவரது சமூக ஊடக பதிவுகள், அவருக்கு பைக் ஓட்டுவதிலும், தனியாகப் பயணம் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் இருப்பதைக் காட்டுகின்றன. திருமணமான ஜோதி மல்ஹோத்ரா இந்தியாவின் பல பகுதிகளுக்குப் போயுள்ளார். பாகிஸ்தான், பூட்டான், இந்தோனேசியா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார்.


அவர் இரண்டு முறை பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார், அங்கிருந்து அவர் வெளியிட்ட காணொளிகள் இந்திய புலனாய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவர் லாகூரின் அனார்கலி பஜார், கட்டாஸ் ராஜ் கோயில் மற்றும் பாகிஸ்தான் முழுவதும் பேருந்தில் பயணம் செய்வது போன்ற பல வீடியோக்களையும், குறும்படங்களையும் பாகிஸ்தானிலிருந்து பதிவேற்றினார். அவரது இன்ஸ்டாகிராம் தலைப்புகளில் ஒன்று "இஷ்க் (காதல்) லாகூர்" என்று இருந்தது. மேலும், அவரது பதிவுகளில் இந்திய மற்றும் பாகிஸ்தானிய கலாச்சார ஒப்பீடுகளும், பாகிஸ்தானிய உணவு வகைகளின் விவரங்களும் இடம்பெற்றிருந்தன.


பாகிஸ்தானில் விருந்து.. பாலியில் ஜாலி




2023 ஆம் ஆண்டில், ஜோதி மல்ஹோத்ரா முதல் முறையாக பாகிஸ்தானுக்கு விசா பெற்றுச் சென்றார். இந்த விசா கமிஷன் ஏஜென்ட்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியான எஹ்சான்-உர்-ரஹீம் என்ற டேனிஷுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின்னர், ரஹிமுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டார். ரஹிம் அவரை பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தினார்.


ஜோதி மல்ஹோத்ரா இந்தியா திரும்பிய பிறகும் அந்த உளவு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இந்திய ராணுவத்தின் நகர்வுகள் மற்றும் இருப்பிட விவரங்களை அவர் பகிர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவர் பாகிஸ்தான் சென்றிருந்தபோது, ரஹீமின் கூட்டாளியான அலி அஹ்வான் ஜோதி மல்ஹோத்ராவுக்கு விருந்தளித்துள்ளார்.


ஸ்ரீநகர் ரயில் பாதை குறித்து உளவு




2024 ஆம் ஆண்டில், அவர் காஷ்மீருக்கும் பயணம் செய்து, டால் ஏரி மற்றும் ஸ்ரீநகர்-பனிஹால் ரயில் பாதை குறித்த வீடியோக்களை பதிவேற்றினார். ஒரு பாகிஸ்தானிய உளவாளியுடன் அவர் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டதாகவும், அவருடன் இந்தோனேசியாவின் பாலிக்குச் சென்றதாகவும் புலனாய்வாளர்கள் மேலும் கூறுகின்றனர்.


ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கைக்குப் பிறகு ஜோதி குறித்த விவரம் தெரிய வந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேலும் பாகிஸ்தான் தூதரக அதிகாரியான ரஹிம் விரும்பத்தகாத நபர் என்று அறிவிக்கப்பட்டு, மே 13 அன்று இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்