பாகிஸ்தானில் விருந்து.. உளவாளியுடன் பாலிக்கு ஜாலி டூர்.. தேச துரோகத்தில் ஈடுபட்டு சிக்கிய ஜோதி ராணி!

May 18, 2025,02:15 PM IST

டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களை பாகிஸ்தான் ராணுவத்துக்கு அளித்து தே துரோக செயலில் ஈடுபட்டதாக கைதாகியுள்ள யூடியூபர் ஜோதி ராணி என்கிற ஜோதி மல்ஹோத்ரா குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜோதி மல்ஹோத்ரா என்ற ஜோதி ராணி சனிக்கிழமையன்று பாகிஸ்தானுக்காக வேவு பார்த்த குற்றச்சாட்டுக்காகவும், முக்கியமான இந்திய இராணுவத் தகவல்களை கசியவிட்டதாகவும் கைது செய்யப்பட்டார். 33 வயதான இவர் உள்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்




யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?


ஜோதி மல்ஹோத்ரா ஹரியானாவைச் சேர்ந்த ஒரு டிராவல் யூடியூபர்.  ஜோவுடன் ஒரு பயணம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கமான 'travelwithjo1'-க்கு 1.37 லட்சம் பாலோயர்கள் உள்ளனர். அவரது இன்ஸ்டாகிராம்  பயோவில், நாடோடி சிம்ம ராசிப் பெண். சுற்றித் திரிபவர். பழைய சிந்தனைகள் கொண்ட நவீன ஹரியானா மற்றும் பஞ்சாபிப் பெண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அவரது சமூக ஊடக பதிவுகள், அவருக்கு பைக் ஓட்டுவதிலும், தனியாகப் பயணம் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் இருப்பதைக் காட்டுகின்றன. திருமணமான ஜோதி மல்ஹோத்ரா இந்தியாவின் பல பகுதிகளுக்குப் போயுள்ளார். பாகிஸ்தான், பூட்டான், இந்தோனேசியா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார்.


அவர் இரண்டு முறை பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார், அங்கிருந்து அவர் வெளியிட்ட காணொளிகள் இந்திய புலனாய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவர் லாகூரின் அனார்கலி பஜார், கட்டாஸ் ராஜ் கோயில் மற்றும் பாகிஸ்தான் முழுவதும் பேருந்தில் பயணம் செய்வது போன்ற பல வீடியோக்களையும், குறும்படங்களையும் பாகிஸ்தானிலிருந்து பதிவேற்றினார். அவரது இன்ஸ்டாகிராம் தலைப்புகளில் ஒன்று "இஷ்க் (காதல்) லாகூர்" என்று இருந்தது. மேலும், அவரது பதிவுகளில் இந்திய மற்றும் பாகிஸ்தானிய கலாச்சார ஒப்பீடுகளும், பாகிஸ்தானிய உணவு வகைகளின் விவரங்களும் இடம்பெற்றிருந்தன.


பாகிஸ்தானில் விருந்து.. பாலியில் ஜாலி




2023 ஆம் ஆண்டில், ஜோதி மல்ஹோத்ரா முதல் முறையாக பாகிஸ்தானுக்கு விசா பெற்றுச் சென்றார். இந்த விசா கமிஷன் ஏஜென்ட்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியான எஹ்சான்-உர்-ரஹீம் என்ற டேனிஷுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின்னர், ரஹிமுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டார். ரஹிம் அவரை பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தினார்.


ஜோதி மல்ஹோத்ரா இந்தியா திரும்பிய பிறகும் அந்த உளவு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இந்திய ராணுவத்தின் நகர்வுகள் மற்றும் இருப்பிட விவரங்களை அவர் பகிர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவர் பாகிஸ்தான் சென்றிருந்தபோது, ரஹீமின் கூட்டாளியான அலி அஹ்வான் ஜோதி மல்ஹோத்ராவுக்கு விருந்தளித்துள்ளார்.


ஸ்ரீநகர் ரயில் பாதை குறித்து உளவு




2024 ஆம் ஆண்டில், அவர் காஷ்மீருக்கும் பயணம் செய்து, டால் ஏரி மற்றும் ஸ்ரீநகர்-பனிஹால் ரயில் பாதை குறித்த வீடியோக்களை பதிவேற்றினார். ஒரு பாகிஸ்தானிய உளவாளியுடன் அவர் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டதாகவும், அவருடன் இந்தோனேசியாவின் பாலிக்குச் சென்றதாகவும் புலனாய்வாளர்கள் மேலும் கூறுகின்றனர்.


ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கைக்குப் பிறகு ஜோதி குறித்த விவரம் தெரிய வந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேலும் பாகிஸ்தான் தூதரக அதிகாரியான ரஹிம் விரும்பத்தகாத நபர் என்று அறிவிக்கப்பட்டு, மே 13 அன்று இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருமுக்கீச்சரம் என்ற உறையூர்.. தேவாரத் திருத்தலங்கள் (2)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 10, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

அதிகம் பார்க்கும் செய்திகள்