- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: இன்னிக்கு லன்ச் உங்க வீட்டுல என்ன.. ஆபீஸில் சாப்பிட உட்காரும்போது எல்லோரும் தவறாமல் கேட்கும் கேள்விதான்.
தினசரி ஏதாவது விதம் விதமா செய்து கொடுத்து அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். அந்த வகையில் செய்வதற்கு எளிதான, அதேசமயம், பைபர் அதிகம் உள்ள உணவு வகையான சத்தான, கீரை கடையலை செய்து ஒரு நாள் லன்ச்சுக்கு கொண்டுப் போய்ப் பாருங்க. உங்க பிரண்ட்ஸ் விட மாட்டாங்க. அப்படி ஒரு சூப்பரான உணவுதான் இது.
எப்படி பண்றதுன்னு பார்க்கலாமா..

தேவையான பொருட்கள்
அரைக்கீரை - 1 கப் (ஆய்ந்து கழுவியது)
சின்ன வெங்காயம் - 10 உரித்தது
பூண்டு - ஆறு பல்
சீரகம் - ஒரு ஸ்பூன்
வர மிளகாய் - 6 (4+2)
வெந்தயம் - கால் ஸ்பூன்
கடுகு + உளுந்தம் பருப்பு - ஒரு ஸ்பூன் (தாளிக்க)
கறிவேப்பிலை - 10 இலை
கொத்துமல்லித்தழை - சிறிதளவு
புளி -1 (நெல்லிக்காய் அளவு)
தக்காளி - 2
நல்லெண்ணைய் - ஆறு ஸ்பூன்
உப்பு புளி காரம் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப
செய்முறை
1. அரைக் கீரை + சின்ன வெங்காயம் + பூண்டு+ தக்காளி + சீரகம் + வரமிளகாய் நாலு, புளி (கழுவியது) கால் கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் இரண்டு விசில் விடவும்.
2. ஆறியதும், தண்ணீர் (கீரை தண்ணீர்) வடிகட்டி + மல்லித்தழை சேர்த்து மிக்ஸியில் பல்ஸ் மோடில் ரெண்டு முறை போடவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கவும். இரண்டு சின்ன வெங்காயம் + ரெண்டு பூண்டு இடித்து எண்ணெய் சட்டியில் போடவும்.
4. வெந்தயம் போடவும். பொன்னிறமாக மாறியதும் கீரை மிக்ஸி ஜாரில் உள்ளதை தண்ணீருடன் (கீரை) ஊற்றவும்.
5. எண்ணெய் பிரிந்து வரும் வரை உப்பு போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
சூடான சாதம் + கீரை கடையல் + நெய் அல்லது நல்லெண்ணெய் ஊட்டி சாப்பிட அருமையாக இருக்கும்
வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல், பேச்சிலர்ஸ் பிகினர்ஸ்க்கும் கூட இந்த சத்தான அரைக்கீரை கீரை கடையல் சூப்பரா இருக்கும். அதை விட முக்கியம் இது நார்ச்சத்து அதிகம் நிரம்பிய உணவு என்பதுதான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
குடையை ரெடியா எடுத்து வச்சுக்கோங்க...தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வெளுக்குமாம்!
சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி மனு... என்ன கிழமை தெரியுமா?
மசோதாவை கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
20 வது ஆண்டாக நிதிஷ் ஆட்சி.. பத்தாவது முறையாக பதவியேற்பு.. சாதித்தார் நிதீஷ் குமார்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.. மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகளுக்கான ₹309 கோடி எங்கே... வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? : அண்ணாமலை கேள்வி!
கூட்டணியை வலுவாக்க அதிமுக தீவிரம்.. கட்சிகளுடன் சூடுபிடிக்கும் ரகசியப் பேச்சுக்கள்
துரைசிங்கம் Coming back?.. மீண்டும் போலீஸ் அவதாரம் எடுக்கிறார் சூர்யா.. ஆவேஷம் இயக்குநருக்காக!
{{comments.comment}}