சென்னை: எப்போதும் அரிசியே சேர்க்காமல் அவ்வப்போது சிறு தானியங்களையும் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது. அந்த வகையில் குதிரைவாலி அரிசி பாசிப் பருப்பு பொங்கல் செய்து சாப்பிட்டால் செம டேஸ்ட்டாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி ஒரு கப்
பாசிப்பருப்பு ஒரு கப்
சீரகம் மிளகு தலா ஒரு ஸ்பூன்
பூண்டு ஆறு பல் உரித்தது
நெய் ஒரு ஸ்பூன்
முந்திரி பத்து
கருவேப்பிலை ஒரு கொத்து
மா இஞ்சி சிறிதளவு பொடியாக கட் செய்தது
பெருங்காயம் சிறிதளவு
பச்சை மிளகாய் இரண்டு
உப்பு தேவைக்கு ஏற்ப
செய்முறை

1. குதிரைவாலி அரிசி பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. குக்கரில் நான்கு கப் தண்ணீர் ஊற்றவும். குதிரைவாலி அரிசி& பாசிப்பருப்பு சேர்க்கவும். (குறிப்பு: அரிசியை எந்த கப்பில் அளந்தோமோ அதே கப்பில் தண்ணீர் ஊற்றவும்)
3.பிறகு பூண்டு, சீரகம் ,மிளகு, பெருங்காயம், பச்சை மிளகாய் ,சிறிது கருவேப்பிலை சேர்க்கவும்
4. மூன்று விசில் வந்ததும் , குக்கர் பிரஷர் அடங்கிய பிறகு, நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து, பொங்கலில் கலக்கி இறக்கவும். சுவையான குதிரைவாலி பொங்கல் ரெடி.
சட்னி : மா இஞ்சி மல்லித்தழை சட்னி செய்ய தேங்காய் துருவல் ஆறு ஸ்பூன், மூன்று ஸ்பூன் வறுகடலை, பச்சை மிளகாய் 3, மா இஞ்சி ஒரு துண்டு, மல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு ,உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைக்கவும். நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, சீரகம் போட்டு தாளிக்கவும்.
அருமையான மாஇஞ்சி மல்லித்தழை சட்னி& குதிரைவாலி அரிசி பொங்கலுடன் சாப்பிட ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும் .ஹெல்தியான உணவும் கூட.
அனைத்து வயதினரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கர்ப்பிணி பெண்கள் டயாபடீஸ் இருப்பவர்கள் அனைவருக்கும் அருமையான உணவு. நல்ல பில்லிங்கான சுவையான பொங்கல் செய்து பாருங்கள் பிரண்ட்ஸ்
மேலும் இது போன்ற சுவையான ரெசிபிகளுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}