- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: சம்மர் வந்தாச்சு.. கோடைகாலம் வந்தாலே கடுப்பாக இருக்கும். இந்த மழையைக் கூட சமாளித்து விடலாம்.. ஆனால் வெயிலை சமாளித்து ஜூன் ஜூலைக்கு வந்து சேருவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். சில நேரங்களில் ஆகஸ்ட், செப்டம்பரிலும் கூட வெயிலடித்து கடுப்படிக்கும்.
சரி அதை விடுங்க.. இப்ப வெயிலை சமாளிக்க என்ன செய்யலாம் என்பது குறித்துப் பார்ப்போம். இது வெயிலுக்கு மட்டும் இல்லைங்க, சாதாரண நாட்களிலும் கூட நாம பாலோ பண்ணலாம்.. அதுதாங்க லெமன் புதினா டீ.
லெமன் புதினா டீ உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. இயற்கையான டீயும் கூட.
தேவையான பொருட்கள்:
2 கப் தண்ணீர்
டீ தூள் 1/2 ஸ்பூன்
எலுமிச்சம் பழம் பாதி அளவு
புதினா இலை ஆறு
சர்க்கரை அல்லது தேன் தேவைக்கு ஏற்ப
செய்முறை:
அ. ஒரு பேனில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அரை ஸ்பூன் டீ தூள் போடவும்
ஆ. வேண்டுமெனில் ஏலக்காய் 2 தட்டி கொண்டு சேர்க்கவும்
இ. தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
ஈ. அதனை வடிகட்டி, பிறகு எலுமிச்சம் பழம் பிழிந்து விடவும். தேவைக்கு சர்க்கரை அல்லது தேன் சேர்க்கவும்.
உ. 6 புதினா இலைகள் சேர்த்து மூடி வைக்கவும்
ஊ. புதினா நறுமணத்துடன் இந்த டீ பருக அருமையாக இருக்கும்.
பயன்கள்:
1.உடல் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
2. உடலை ஹைட்ரேட் செய்கிறது.
3. உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது.
4. கலோரிகள் குறைவாக உள்ளது.
5. தேயிலையில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் மாசுபடுத்திகளை அகற்றுகிறது.
6. வெப்பம் அதிகமாக உள்ளதால் தாகம் நிறைய உண்டாகும். இதனை பருகினால் தாகம் தணிப்பதன் மூலம் சுறுசுறுப்பாக உடலை வைத்துக் கொள்ளலாம். புத்துணர்ச்சி உருவாகும்.
7.மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துகிறது.
8. எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் உடல் திசுக்களின் வளர்ச்சிக்கு முக்கியமாக உள்ளது.
9. ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இருமுறை லெமன் டீ புதினா உடன் சேர்த்து சர்க்கரை இல்லாமல் குடிக்க ,செரிமானம் மேம்படும்.
10. மலச்சிக்கலை குறைக்கும் ,உடலை சரியாக செயல்பட வைக்கிறது.
பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}